கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு முயன்ற மருத்துவர்கள் - ஆணுறுப்பை அறுத்த நர்ஸ்
பாலியல் வன்கொடுமைக்கு முயன்ற மருத்துவரின் ஆணுறுப்பை செவிலியிர் பிளேடால் அறுத்துள்ளார்.
பாலியல் வன்கொடுமை
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது செவிலியருக்கு மருத்துவமனையில் வைத்து மருத்துவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிளேடால் அறுத்த செவிலியர்
பீகார் மாநிலம், பாட்னாவை அடுத்த கங்காபூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த செவிலியரை அங்கு பணியாற்றி வந்த மருத்துவர்கள் சஞ்சய் குமார், சுனில் குமார், அவதேஷ் குமார் ஆகியோர் பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றுள்ளனர்.
அவர்களிடம் இருந்து தப்பிக்க செவிலியர், தன் கையில் கிடைத்த பிளேடை வைத்து மருத்துவர் குமாரின் ஆணுறுப்பை அறுத்துள்ளார். இதையடுத்து மருத்துவமனையில் இருந்து தப்பிய செவிலியர் செல்போன் மூலம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.
பாராட்டு
உடனடியாக விரைந்து வந்த காவல்துறையினர் செவிலியரை பாதுகாப்பாக மீட்டதோடு, மூவரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் மூவரும் மது அருந்தி விட்டு இந்த குற்ற செயலில் ஈடுபட்டதாகவும், வன்புணர்வு முயற்சிக்கு முன் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை அணைத்துள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தில் துரிதமாக செயல்பட்ட செவிலியரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஞ்சய் குமார் பாண்டே பாராட்டியுள்ளார்.