ஒரு கசப்பான அனுபவம்; நான் உயிரோடு இருக்கும்போதே...மனம் திறந்த நடிகை பாவனா!

Bhavana Tamil Cinema Actors
By Swetha May 08, 2024 11:34 AM GMT
Report

நடிகை பாவனா தனது கசப்பான அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் .

நடிகை பாவனா 

கடந்த 2002-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான நம்மல் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பாவனா. அவர் நடித்த முதல் படமே ஹிட் ஆன நிலையில், அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்தன. மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருந்த பாவனா பின்னர் தமிழிலும் அறிமுகமானார்.

ஒரு கசப்பான அனுபவம்; நான் உயிரோடு இருக்கும்போதே...மனம் திறந்த நடிகை பாவனா! | Bhavana Said Shocking Reason

மிஷ்கான் இயக்கத்தில் 'சித்திரம் பேசுதடி' படத்தில் எதார்த்தமான நடிப்பால் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். பின்னர், தீபாவளி, கூடல் நடிகர், ஆர்யா, வாழ்த்துக்கள், ஜெயம் கொண்டான் படங்களில் நடித்தார். தமிழில் கடைசியாக 2010-ஆம் ஆண்டு அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்த திரைப்படம் அசல்.

அதற்கு பிறகு பாவனா சில பட வாய்ப்புகள் வந்து அதனை மறுத்துவிட்டாராம். இருப்பினும் கன்னடம், மற்றும் மலையாளத்தில் தரமான கதைகளை தேர்வு செய்து தொடர்ந்து நடித்து வந்தார். முன்னதாக பாவனா சில வருடங்களுக்கு முன்னர் மிகப்பெரிய சர்ச்சை ஒன்றில் சிக்கி அதில் இருந்து மீண்டார்.

பாவனாவுடன் உறவில் இருந்ததே...மகிழ்ச்சியான தருணம்..உளறிய மிஷ்கின்

பாவனாவுடன் உறவில் இருந்ததே...மகிழ்ச்சியான தருணம்..உளறிய மிஷ்கின்

மனம் திறந்தார்

அந்த சர்ச்சை ஓய்ந்த உடன் தனது காதலரும், திரைப்பட தயாரிப்பாளருமான நவீன் என்பவரை திருமணம் செய்து மகிழ்ச்சியாக இருந்து வந்தார். திருமணத்திற்கு பின்னர் நடிப்பு பணியை தொடர்ந்து வந்தாலும்.திரைப்படங்களை குறைத்து கொண்டார். குறிப்பாக சுமார் 14 வருடம் கழித்து தான் 'தி டோர்' என்கிற தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.

ஒரு கசப்பான அனுபவம்; நான் உயிரோடு இருக்கும்போதே...மனம் திறந்த நடிகை பாவனா! | Bhavana Said Shocking Reason

அண்மையில் இவரிடம் படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டது ஏன் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பாவனா, , "என்னைப் பற்றி பல வதந்திகள் பரப்பப்பட்டன. சம்மந்தமே இல்லாமல் சிலருடன் இணைந்து பேசினார்கள்.

நான் உயிரோடு இருக்கும் போதே, இறந்து விட்டதாக வதந்திகளை பரப்பப்பட்டன. இதுபோன்ற சில கசப்பான அனுபவங்களே நான் திரைப்படங்கள் நடிப்பதை குறைத்து கொள்ள காரணம் என்று தெரிவித்துள்ளார்.