family emergency sir..லீவு போட்டு ஆர்சிபி போட்டிக்கு சென்ற பெண்; மேனேஜர் கொடுத்த ஷாக்!
ஆர்சிபி அணியின் தீவிர விசிறியான பெண் ஒருவர் ஆபிஸில் பொய் சொல்லி லீவு கேட்டு போட்டிக்கு சென்றுள்ளார்.
போட்டிக்கு சென்ற பெண்
நடப்பாண்டின் ஐபிஎல் போட்டி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை ஆர்சிபி அணி விளையாடிய 5 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில் தொடர்ந்து அடுத்தடுத்த போட்டியில் தோல்வியை சந்தித்து வருகிறது.
கடந்த முறை ஆர்சிபியின் ஹோம் கிரவுண்ட் ஆன சின்னசாமி ஸ்டேடியமில் நடைபெற்ற லக்னோவ் சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியுடனான போட்டியில் 28 ரன் வித்தியாசத்தில் லக்னோவ் அணி வெற்றிபெற்றது.
இந்நிலையில், தில்லுமுல்லு படம் பாணியில் கர்நாடக மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்த நேஹா திவேதியும் என்ற பெண் ஒருவர் அவசர அவசரமாக ஆபிஸில் இருந்து பேமலி எமர்ஜென்சி என்று மேனேஜருக்கு சொல்லிவிட்டு விரைவாக புறப்பட்டார்.
மேனேஜர் குடுத்த ஷாக்
அவரது அவசரத்தை பார்த்து பர்மிஷனை உண்மை என்று நம்பி அவரை வீட்டுக்கு அனுப்பிய மேனேஜருக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. “ஈ சாலா கப் நம்தே " அணியின் தீவிர ரசிகையான நேஹா, பெங்களுருவில் நடைபெற்ற ஆர்சிபி போட்டியில் சப்போர்ட் செய்த அவர் டிவியில் வந்தார்.
இதனை பார்த்ததும் இதற்காக தான் நேஹா இப்படி அவசரமாக சென்றிருக்கிறார் என்று ஐபிஎல் பார்த்தபோதுதான் மேனேஜருக்கு தெரியவருகிறது. டிவியில் போட்டியை கண்ட மேலாளர் இதை பற்றி நேஹாவிடம் கேட்டிருக்கிறார். அப்போது நேஹா நீங்கள் ஆர்சிபி ஃபேனா என்று கேட்டிருக்கிறார்.
பதிலுக்கு நேஹாவும் சாதாரணமாக ஆமாம் என்று கூறியிருக்கிறார். இல்ல நேற்று உங்கள டிவில சோகமான முகத்துடன் பார்த்தேன் என்றதும்தான் நேஹாவுக்கு அதிர்ச்சியளித்துள்ளது. இந்த உரையாடலை நேஹா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டார்.அது பரவி வைரலானதை தொடர்ந்து ஆயிரம் பேர் இந்த ருசிகர சம்பவத்தை லைக் செய்திருக்கின்றனர்.