அடுத்தடுத்து 4 சதம் விளாசிய அசுர ஃபார்மில் உள்ள பெங்களூர் வீரர்..யார் தெரியுமா?

india team rcb Padikkal
By Jon Mar 09, 2021 02:31 PM GMT
Report

விஜய் ஹசாரே தொடரில் தொடர்ந்து 4 சதங்களை விளாசிய அசுர பார்மில் பெங்களூர் வீரர் தேவ்தத் படிக்கல் அசத்தியுள்ளார். விஜய்ஹசாரே டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 2-வது காலிறுதி ஆட்டத்தில் டெல்லியும் கர்நாடக அணிகளும் மோதின. இப்போட்டியில் முதலில் பேட் செய்த கர்நாடக அணியில் துவக்க ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கல் சதம் விளாசினார்.

102 ரன்கள் குவித்து படிக்கல் ஆட்டமிழந்தார். தேவ்தத் படிக்கல் தொடர்ந்து 4 சதங்கள் விளாசி வியக்க வைத்துள்ளார். ஏற்கனவே, ஒடிசா (152 ரன்கள்), கேரளா (126*) ரயில்வேஸ் (145*) அணிகளுக்கு எதிராக சதம் விளாசியிருந்தார். ஒட்டுமொத்தமாக 6 போட்டிகளில் விளையாடிய படிக்கல் மொத்தம் 673 ரன்கள் விளாசியுள்ளர்.

மேலும் இந்தியா கேப்டன் விராட் கோலி கடந்த 2008 ஆம் ஆண்டு இதே போன்ற சாதனையை படைதிருந்தார். அதன் பிறகு தொடர்ந்து 4 சதங்கள் விளாசிய வீரர் என்ற பெருமையைப் பெற்றார் படிக்கல்.