பேரழிவுக்கான ஆரம்பம்; குறையப்போகும் மக்கள் தொகை - பாபா வாங்கா கணிப்புகள் வைரல்!
இந்த ஆண்டு பேரழிவுக்கான தொடக்கமாக இருக்கும் என பாபா வாங்கா கணித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாபா வாங்கா
பல்கேரிய நாட்டை சேர்ந்தவர் பாபா வங்கா. 1911ல் வடக்கு மேசிடோனியாவில் பிறந்தார். சிறுவயதில் கடுமையான புயல் ஒன்றில் சிக்கி கண் பார்வையை இழந்தார். அதில் அவருக்கு எதிர்காலத்தை கணித்து கூறும் சக்தி கிடைத்ததாக கூறப்படுகிறது.
1996ல் மரணமடைந்தார். இவர் உலக நடப்புகள் குறித்து கணித்து கூறியவைகளில் சுமார் 85 சதவீதம் அப்படியே நடந்தேறியுள்ளது. குறிப்பாக செர்னோபில் அணு உலை விபத்து,
பகீர் கணிப்புகள்
பிரிட்டன் இளவரசி டயானா மரணம், சோவியத் யூனியன் கலைப்பு, அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல், கறுப்பின அதிபர், பிரிஸிட் போன்றவை நிஜமாகியுள்ளன. இந்நிலையில், மனித உயிர்களை காக்கும் வகையில் ஆய்வகங்களில் உறுப்புகள் தனியாக வளர்க்கப்படும்.
ஒரு பக்கம் மனித குல அழிவிற்கான தொடக்கமாக இந்த ஆண்டு இருக்கும். மனிதர்களுக்கும் ஏலியன்களுக்கும் இடையே தொடர்பு ஏற்படும். மனித இனத்திற்கு நன்மை அல்லது தீமை என எது வேண்டுமானாலும் நடைபெறலாம் எனக் குறிப்பிட்டுள்ளதாக பரவி வருகிறது.