ஆசை வார்த்தை கூறி இப்படி செய்றாங்க..பகலில் பிச்சை, இரவில் பாலியல் தொழில்?

Chennai Tamil Nadu Police Transgender
By Swetha Apr 29, 2024 11:51 AM GMT
Report

ஆசை வார்த்தை கூறி சிறு வயது திருநங்கைகளை பாலியல் தொழில் ஈடுபடுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பகலில் பிச்சை 

சென்னையில் உள்ள ஆலந்தூரைச் சேர்ந்த திருநங்கை ஒருவர் வெளியூரில் இருந்து வரும் சிறுவயது திருநங்கைகளை ஆசை வார்த்தை பல கூறி பாலியல் தொழிகளிலும், பிச்சை எடுக்க வைப்பதாகவும் திருநங்கைகளின் தலைவிகள் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

ஆசை வார்த்தை கூறி இப்படி செய்றாங்க..பகலில் பிச்சை, இரவில் பாலியல் தொழில்? | Begging During The Day Sex Work At Night

அதில், தான் டெய்லராக உள்ள நிலையில், தன்னுடன் சக தோழிகள் 5 பேர் வசித்து வருவதாக தெரிவித்துள்ளார். தங்களுக்கு மூத்த திருநங்கைகளாக உள்ள 3 தலைவிகள் வெளிமாநிலங்களிருந்து சமூக வலைதளங்கள் மூலம் பெண்களைப் போன்ற உணர்வுடன் இருக்கும் சிறுவயது திருநங்கைகளைக் குறிவைத்து

உல்லாசத்திற்கு அழைத்து அதிக பணம் கேட்ட திருநங்கை - கொடூரமாக கொன்ற லாரி ஓட்டுனர்

உல்லாசத்திற்கு அழைத்து அதிக பணம் கேட்ட திருநங்கை - கொடூரமாக கொன்ற லாரி ஓட்டுனர்

பாலியல் தொழில்

அவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் எதுவும் வழங்காமல் ஆசைவார்த்தை கூறி உறுப்பு மாற்றம் செய்வதாக வரவழைத்து அவர்களைப் பகலில் பிச்சை எடுக்க வைப்பது, இரவில் பாலியல் தொழிலில் ஈடுபட வைப்பது என சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆசை வார்த்தை கூறி இப்படி செய்றாங்க..பகலில் பிச்சை, இரவில் பாலியல் தொழில்? | Begging During The Day Sex Work At Night

மேலும், அவர்கள் திருட்டு, போதைப்பொருள் உபயோகம்போன்றவற்றை செய்வதற்கும் அந்த தலைவிகள்தான் காரணம் என்றும், இதனைத் தட்டிக்கேட்டதால் தன் மீது காவல் நிலையத்தில் பொய் புகார் கொடுத்து வழக்கு போட வைத்துள்ளதாகத் திருநங்கை தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து காவல்துறை உரிய விசாரணை நடத்தி 3 பேர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.