காதல் நகரத்தை உலுக்கும் மூட்டைப்பூச்சி; அல்லோலப்படும் மக்கள் - என்ன காரணம்?
பாரிஸ் பரவலான மூட்டைப்பூச்சி தொல்லையால் போராடி வருகிறது.
மூட்டைப்பூச்சி தொல்லை
பாரிஸ் நகரம் முழுவதும் உள்ள ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளில் சிறிய அளவிலான மூட்டைப்பூச்சிகள் கண்டறியப்பட்டது. அதன்பின் திரையரங்குகளையும் ஆக்கிரமித்துள்ளது.
இந்நிலையில், சமீப நாட்களாக தேசிய அதிவேக ரயில்கள் மற்றும் பாரிஸ் மெட்ரோ இரண்டிலும் மூட்டைப் பூச்சிகள் ஊர்ந்து செல்வதாக தெரிவிக்கின்றனர். மேலும், மூட்டைப் பூச்சி கடித்தல் அதிகரித்துள்ள நிலையில்,
தீவிர நடவடிக்கை
அதற்கான சிகிச்சைக்கான தேவையும் அதிகரித்துள்ளது. மூட்டைப் பூச்சிகள் நோய்களைப் பரப்புவதில்லை என்றாலும், அவற்றின் இருப்பு மன ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும்.
அதனால், போக்குவரத்துத்துறை அமைச்சர் இந்தப் பிரச்சணையைத் தீர்க்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அதனைத் தொடர்ந்து, துணை மேயர் இம்மானுவேல் கிரிகோயர் உள்ளிட்ட நகர அதிகாரிகள், இந்த சிக்கலை தீர்க்க ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.