நாறும் காதல் நகரம் .. எங்கு பார்த்தாலும் எலிகள் : சிக்கலில் பாரிஸ்
பாரிஸ் நகர் முழுவதும் ஒரே துர்நாற்றாமும் , எலிகள் தொல்லைகளும் அதிகரித்துள்ளதால் பரபரப்பு நிலவுகின்றது.
பாரிஸில் பதற்றம்
காதல் நகரம் என்று அழைக்கப்படும் பாரீஸ் நகருக்கு பல பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் உள்ளது , இந்த நிலையில் தற்போது புது வித பிரச்சினையினை எதிர்கொண்டுள்ளது , அந்த வகையில் தற்போது புதுவித பிரச்சினையினை எதிர்கொண்டுள்ளது , பாரிஸ் நகரின் பல்வேறு நகரின் சாலைகளில் குப்பைகள் மலை போல தேங்கி சுகாதார சீர்கேட்டை உருவாக்கும் சூழல் உருவாகியுள்ளது .
இதற்குகாரணம் அங்கு உள்ள துப்புரவுத்தொழிலாலர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கியுள்ளதே இதற்கு காரணமாக கூறப்படுகின்றது, துப்புரவுத் தொழிலாளர்கள் ஓய்வு பெறும் வயதை 62இல் இருந்து 64 ஆக உயர்த்தும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் உத்தரவிட்ட நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, துப்புரவுத் தொழிலாளர்கள் மார்ச் 6 முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குப்பை நகரம்
இதனால் பாரீஸ் நகர் முழுக்க குப்பைகளால் நிரம்பியுள்ளன. முக்கிய சாலைகளில் ஆள் அளவுக்குக் குப்பைகள் தேங்கியுள்ளன. சுமார் 5600 டன் குப்பைகள் சேகரிக்கப்படாமல் குவிந்துள்ளன குப்பைகள் குவிந்துள்ளதால் எலிகள் அங்குப் படையெடுக்கும் சூழல் உருவாகியுள்ளது நகர் முழுக்க அழுக்காக இருக்கிறது.. நகரில் குவிந்திருக்கும் குப்பைகள் எலிகளையும் கரப்பான் பூச்சிகளையும் ஈர்க்கிறது. குப்பைகள் குவிந்துள்ளது எலிகளின் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
அதிகரித்த எலிதொல்லை
அவை சுதந்திரமாகக் குப்பைகள் மத்தியில் சுற்றுகிறது, இனப்பெருக்கம் செய்து, சாலைகளிலேயே சிறுநீர் கழிவுகளைப் போட்டுவிடுகிறது. இது மிக மோசமான சுகாதார சீர்கேட்டை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது" என்றார். இதன் காரணமாக உலகின் காதலர் நகரமாக அறியப்பட்ட பாரீஸ் இப்போது குப்பை நகரமாக மாறியுள்ளது.