ஆரம்பமாகும் ஐபிஎல்: குஷியில் ரசிகர்கள்
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஏப்ரல் 9-ம் தேதி முதல் தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்பட்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் ஏப்ரல் 9-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
இதில் முதல் போட்டி மும்பை பெங்களூரு அணிகள் களத்தில் இறங்குகின்றன. மொத்தம் 56 லீக் போட்டிகள் நடைபெறும் என்றும், அவை 6 மைதானங்களில் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
? BCCI announces schedule for VIVO IPL 2021 ?
— IndianPremierLeague (@IPL) March 7, 2021
The season will kickstart on 9th April in Chennai and the final will take place on May 30th at the Narendra Modi Stadium, Ahmedabad.
More details here - https://t.co/yKxJujGGcD #VIVOIPL pic.twitter.com/qfaKS6prAJ
சென்னை, மும்பை, தில்லி, கொல்கத்தா, பெங்களூரு, ஆமதாபாத் ஆகிய நகரங்களிலுள்ள மைதானங்களில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளன.