திடீரென பிக்பாஸில் இருந்து வெளியேறினார் பவா செல்லத்துரை - இதுதான் காரணமா?

Bigg Boss
By Sumathi Oct 09, 2023 04:25 AM GMT
Report

பவா செல்லத்துரை பிக்பாஸில் இருந்து வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.

பவா செல்லத்துரை

பிக் பாஸ் தமிழின் சீசன் 7 கடந்த அக்டோபர் முதல் தேதி தொடங்கியது. இந்த வருடம் வழக்கத்திற்கு மாறாக இரண்டு வீடுகள். நாமினேஷன் பட்டியலில் இடம்பிடிப்பவர்கள் இரண்டாவது வீட்டுக்கு அனுப்பப்படுகிறார்கள்.

திடீரென பிக்பாஸில் இருந்து வெளியேறினார் பவா செல்லத்துரை - இதுதான் காரணமா? | Bava Chelladurai Quits Bigg Boss Tamil Season 7

முதல் எவிக்‌ஷன் நேற்று நிகழ்ந்தது. அனன்யா எலிமினேட்டாகி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். இந்நிலையில், அடுத்த கேப்டன் சரவணனை சக போட்டியாளர்களைப் பற்றி ஓரே வார்த்தையில் சொல்லச் சொல்லி பிக்பாஸ் கேட்டிருக்கிறார்.

வெளியேறினாரா.?

அப்போது, பவா செல்லத்துரை குறித்துக் குறிப்பிடும் போது ‘சோம்பேறி’ எனக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து, பவா, இந்த வீட்டில் என்னால் சில டாஸ்குகளைச் செய்ய இயலாது. இந்த வீட்டுக்கு நான் வரும் போது சூழ்ச்சிகள், சதிகள் எல்லாம் இருக்குமெனத் தெரிந்துதான் வந்தேன்.

திடீரென பிக்பாஸில் இருந்து வெளியேறினார் பவா செல்லத்துரை - இதுதான் காரணமா? | Bava Chelladurai Quits Bigg Boss Tamil Season 7

ஆனால் இங்குக் கூடுதலாக வன்மமும் அதிகமாக இருக்கிறது. எனவே தொடர்ந்து இங்கு இருந்து டாஸ்குகளைச் செய்ய என் உடலும் ஒத்துழைக்காது. எனவே நான் வெளியேறி விடுகிறேன் எனக் கூறி வெளியேறிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து முறைப்படி பிக் பாஸ் இன்று தெரிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.