2 குழந்தைக்கு அப்பா - ஆனாலும் தீவிரமான லவ்..இதனால் தான் திருமணம் நடக்கல ..பானுபிரியா

Bhanupriya Actress
By Karthick Apr 04, 2024 05:16 PM GMT
Report

 80-களில் தென்னிந்தியாவின் மிக முக்கிய நடிகையாக விளங்கியவர் பானுபிரியா.

பானுப்ரியா

80-களில் தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் பெரும் ஆதிக்கத்தை செலுத்தியவர் நடிகை பானுபிரியா.

banupriya-opens-up-about-her-love-story

1983-ஆம் ஆண்டில் மெல்ல பேசுங்கள் என்ற தமிழ் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான பானுபிரியா, அதனை தொடர்ந்து அவரது தாய் மொழியான தெலுங்கில் நடிக்க துவங்கினார்.

banupriya-opens-up-about-her-love-story

1988-ஆம் ஆண்டில் தெலுங்கில் இவர் நடித்த ஸ்வர்ணகலாம் படம் பெரும் வெற்றியை பதிவு செய்தது மட்டுமின்றி இவருக்கு தேசிய விருதையும் வென்று கொடுத்தது. தமிழ், தெலுங்கு மொழியில் எண்ணற்ற மெகா ஹிட் படங்களில் நடித்துள்ள பானுபிரியா, 1998-ஆம் ஆண்டு ஆதர்ஷ் கவுஷால் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

banupriya-opens-up-about-her-love-story

ஆனால் இவர்களது திருமணம் ஒரு வருடத்திலேயே கசந்தது. மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்த துவங்கிய பானுபிரியா, தற்போது பிஸியான நடிகையாக உள்ளார்.

காதல்

இவர், தெலுங்கில் மிகவும் பிரபலமாக இருந்த வம்சி என்ற இயக்குனரை மிகவும் தீவிரமாக காதலித்துள்ளார். இந்த தகவல் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. காரணம் இயக்குனர் வம்சி ஏற்கனவே திருமணமானவர். இயக்குனர் வம்சி இயக்கிய சித்தாரா என்ற படத்தில் நடித்ததன் மூலம் இவர்களுக்குள் காதல் மலர்ந்துள்ளது.

கல்யாணமான புதுசுல அது நடக்கவே இல்லை - அவரு அப்போ ரொம்ப கோவப்படுவாரு - பாவனா ஓப்பன் டாக்

கல்யாணமான புதுசுல அது நடக்கவே இல்லை - அவரு அப்போ ரொம்ப கோவப்படுவாரு - பாவனா ஓப்பன் டாக்

ஆனால், அது திருமணத்தில் முடியவில்லை. இது குறித்து பானுப்ரியாவே பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். அவர் பேசும் போது, அன்றைய கலகட்டத்தில் இயக்குனர் வம்சி, “என்னை திருமணம் செய்து கொள்வாயா?” என்றார்.

banupriya-opens-up-about-her-love-story

ஆனால் வீட்டில் அம்மா சம்மதிக்கவில்லை. அவருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதால், எல்லாவற்றையும் யோசித்த அம்மா அந்த திருமணத்தை விரும்பவில்லை. அனைத்து அம்மாக்களும் இப்படித்தான் நினைப்பார்கள்.. அதனால்தான் எங்கள் திருமணம் நடக்கவில்லை என்றார் பானுப்ரியா.