வருகிற மார்ச் 27ம் தேதி முதல் ஏப்ரல் 4ம் தேதி வங்கிகள் செயல்படாது!
மார்ச் 27-ம் தேதி முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை 9 நாள்களில் 7 நாள்கள் வங்கிகளுக்கு விடுமுறை நாட்கள் வர இருக்கிறது. பொதுத்துறை வங்கி ஊழியர்களின் நாடு தழுவிய போராட்டத்தின் காரணமாக, சமீபத்தில் தான் கடந்த வாரம் 4 நாட்கள் வங்கிகள் தொடர்ந்து வங்கி சேவைகள் தடைப்பட்டன. இந்நிலையில் வருகிற 27ம் தேதியிருந்து தொடர்ச்சியாக வங்கிகளுக்கு விடுமுறை வர இருக்கிறது.
இந்தமுறை பொதுத்துறை மற்றும் தனியார் வங்குகளுக்கும் 7 நாள்கள் விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளன. வருகிற மார்ச் 27ம் தேதி நான்காவது சனிக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை.
அடுத்து மார்ச் 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை. மார்ச் 29 ஹோலி பண்டிகை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை, மார்ச் 30ம் தேதி ஹோலி பண்டிகையின் காரணமாக பாட்னாவில் மட்டும் விடுமுறை, மார்ச் 31ம் தேதி நிதி ஆண்டு முடிவு என்பதால் அன்று வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
ஏப்ரல் 1ம் தேதி வங்கிக் கணக்கு முடிப்பு என்பதால் அன்றும் விடுமுறை, ஏப்ரல் 2ம் தேதி புனித வெள்ளி என்பதாலும், ஏப்ரல் 4ம் தேதி ஞாயிற்றுக் கிழமை என்பதாலும், ஏப்ரல் 6ம் தேதி தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதால் மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வங்கி சேவை தேவை உள்ளவர்கள் விடுமுறை நாள்களைக் கணக்கில் கொண்டு முன்னதாகவே பணிகளை முடித்து கொள்வது சிறந்தது.