பரபரப்பான ஆட்டத்தில் பெங்களூரு அணி 'த்ரில்' வெற்றி
மும்பை அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி த்ரில் வெற்றி பெற்றது. 14-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இன்று முதல் தொடங்கியுள்ளன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களுரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற விராட் கோலி மும்பை அணியை பேட்டிங் செய்யுமாறு பணித்தார்.
இதன்படி முதலில் பேட்டிங்கை துவக்கிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் சேர்த்தது. மும்பை அணியில் அதிகபட்சமாக கிறிஸ் லின் 35 பந்துகளில் 49 ரன்கள் விளாசினார். பந்து வீச்சை பொருத்தவரை ஹர்ஷல் படேல் 4 ஓவர்கள் வீசி 27 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து, 160- ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.
அதன்படி பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக காப்பதன் விராட் கோலி மற்றும் வாஷிங்டன் சுந்தர் களமிறங்கினர். அணியின் ஸ்கோர் 36 ரன்களை எட்டியபோது வாஷிங்டன் சுந்தர் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த பட்டித்தரும் நிலைக்கவில்லை. இந்த நிலையில் கோலி உடன் கிளென் மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தார்.
இருவரும் அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினார். அணியின் ஸ்கோர் 98 ரன்களில் இருந்த போது பும்ரா கோலியின் விக்கெட்டை காலி செய்தார் சிறிது நேரத்தில் மேக்ஸ்வெல்லும் அவுட் ஆனார். மறுமுனையில் அதிரடியாக ஆடி வந்தார் டிவில்லியர்ஸ் அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றார்.
பெங்களூரு அணியின் வெற்றிக்கு 3 பந்துகளில் 3 ரானால் தேவைப்பட்ட நிலையில் தேவையில்லாமல் டிவில்லியர்ஸ் ரன் அவுட் ஆனார்.
இதனால் இறுதி நேரத்தில் பதற்றம் ஏற்பட்டது இறுதியாக ஒரு பந்துக்கு ஒரு றன் தேவைப்பட்ட நிலையில் ஹர்ஷல் படேல் ஒரு ரன் எடுத்து பெங்களூரு அணிக்கு முதல் வெற்றியை தேடி தந்தார்.