ATM-ல் சட்னியுடன் வரும் சூடான இட்லி.. வைரலாகும் இயந்திரம் - எங்கே தெரியுமா..
ஏடிஎம் இயந்திரத்தில் எப்போது வேண்டுமானாலும் இட்லியுடன் சட்னி கிடைக்கும் செயல்முறை பலரையும் கவர்ந்துள்ளது.
இட்லி ஏடிஎம்
பெங்களூரில் இட்லி ஏடிஎம் எனும் வாகன இட்லி தயாரிக்கும் இயந்திரம் சட்னி மற்றும் பொடியுடன் வெறும் 12 நிமிடங்களில் 72 இட்லிகள் வரை விநியோகிக்க கூடியதாக உள்ளது. இந்தியாவின் பிரபல காலை உணவான இட்லி ஏடிஎம் இயந்திரத்தில் ஆர்டர் செய்யும் செயல்முறை,

விற்பனை இயந்திரத்தைப் பயன்படுத்துவதைப் போலவே உள்ளது. ஆர்டரைச் செய்ய மற்றும் பணம் செலுத்த அங்குள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும். ஆர்டர் செய்யப்பட்டவுடன், ஆர்டர் செய்த நபர் தனது மொபைலில் ஒரு குறியீட்டைப் பெறுவார்.
வைரல் இயந்திரம்
அந்த குறியீட்டை இயந்திரத்தில் காட்டினால், அது ஸ்கேன் செய்து, இயந்திரம் சில நிமிடங்களில் ஆர்டரை பேக் செய்து வழங்கும். இந்த இட்லி தயாரிக்கும் இயந்திரம் ஒரு Freshot Foodbots எனும் ஸ்டார்ட்-அப் மூலம் அமைக்கப்பட்டுள்ளது.
Idli ATM in Bangalore... pic.twitter.com/NvI7GuZP6Y
— B Padmanaban (padmanaban@fortuneinvestment.in) (@padhucfp) October 13, 2022
கணினி பொறியாளரான ஹிரேமத், 2016 ஆம் ஆண்டு தனது மகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது, இரவு நேரத்தில் அவரால் சூடான இட்லிகளை தயாரிக்க முடியவில்லை. அதற்காக இதுபோன்ற உணவை தயாரிக்க ஒரு தானியங்கி இயந்திரத்தை உருவாக்க நினைத்தேன்.
அது தான் இப்பொது வடிவேல் பெற்று செயல்பட்டு வருகிறது என்றார்.
இது இப்போது 24 மணிநேரமும் வேலை செய்கிறது. இட்லி-போட் தென்னிந்திய காலை உணவுக்கான முதல் முழு தானியங்கு சமையல் மற்றும் விநியோக இயந்திரம் என்று கூறப்படுகிறது.