இனி இவர்கள் சமூக வலைதளம் பயன்படுத்த தடை - எங்கு, ஏன் தெரியுமா?

Emmanuel Macron France Social Media
By Sumathi Jun 12, 2025 12:56 PM GMT
Report

பிரான்சில் சிறுவர்கள் சமூக வலைத்தளம் பயன்படுத்த தடை விதிக்கப்படவுள்ளது.

குழந்தைகளுக்கு தடை

பிரான்ஸ் நாட்டில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை தடுக்க விரைவில் சட்டம் கொண்டு வரப்படவுள்ளது. இதுகுறித்து அந்நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரான் கூறுகையில்,

இனி இவர்கள் சமூக வலைதளம் பயன்படுத்த தடை - எங்கு, ஏன் தெரியுமா? | Ban Social Media For Under 15S In France

'பிரான்சில் சிறுவர்கள் செல்போனில் சமூக வலைத்தளம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனால் சிறுவர்கள் தவறான பாதையில் செல்கிறார்கள். மேலும் சிறுவர்கள் வன்முறை செயல்களிலும் ஈடுபடுகிறார்கள்.

லாஸ் ஏஞ்சல்ஸில் திடீர் ஊரடங்கு உத்தரவு - என்ன காரணம்?

லாஸ் ஏஞ்சல்ஸில் திடீர் ஊரடங்கு உத்தரவு - என்ன காரணம்?

அதிபர் தகவல்

சிறுவர்கள் நமது நாட்டின் மனித வளமாக இருக்கும்நிலையில் சமூக வலைத்தளம் மூலமாக அவர்கள் கெட்டு சீரழிவது கண்கூடாக தெரிகிறது. இந்தநிலையில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளம் பயன்படுத்துவதை தவிர்ப்பதற்காக தடை விதிக்கக்கோரி

Emmanuel Macron

ஐரோப்ப ஒன்றியத்திடம் புகார் அளித்துள்ளேன். அவர்கள் ஒப்புதல் அளிக்கவில்லை எனில் ஒரு சில மாதங்களில் பிரான்சில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளம் பயன்படுத்துவதற்கு நிரந்தர தடை விதிக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.