பாகிஸ்தான் கொடி உள்ள பலூன்: காஷ்மீர் எல்லைக்குள் பரந்ததால் பரபரப்பு

balloon pakistan flag
By Jon Mar 10, 2021 01:40 PM GMT
Report

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் தீராத பிரச்சனையாக இருப்பது காஷ்மீர் விவகாரம். காஷ்மீர் மீது பாகிஸ்தானும் உரிமை கொண்டாடுவதால் எழுபது ஆண்டுகளாக இரண்டு நாடுகளும் மோதலிலே இருந்து வருகின்றன. இதற்காக இரண்டு நாடுகளும் மூன்று முறை போரிட்டுள்ளன. காஷ்மீர் சிக்கலுக்கு தீர்வு காணாமல் இந்தியா உடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த முடியாது என பாகிஸ்தானும் பிடிவாதமாக இருக்கிறது.

தற்போது இந்திய காஷ்மீர் எல்லைக்குள் பாகிஸ்தான் கொடி போர்த்திய பலூன் கண்டறியப்பட்டுள்ளது கடும் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. பாகிஸ்தான் விமான உருவம் கொண்ட அந்த பலூன் ஹிராநகர் பகுதியில் இன்று கண்டறியப்பட்டது.

இந்நிலையில் அந்த பலூனை பறிமுதல் செய்து ஜம்மு - காஷ்மீர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.