மைக்ரோவேவனில் குழந்தை; தொட்டிலில் தூங்கவைப்பதாக நினைத்த தாய் - பகீர் சம்பவம்!
மைக்ரோவ் ஓவனில் குழந்தையை படுக்க வைத்து தாய் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாய் அதிர்ச்சி செயல்
அமெரிக்கா, கன்சாஸ் நகரை சேர்ந்தவர் மரியா தாமஸ் (26). இவருக்கு 1 மாதத்தில் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில், குழந்தையை தொட்டிலில் தூங்கவைக்க நினைத்துள்ளார்.
தொடர்ந்து, தொட்டிலுக்கு பதிலாக உணவை சூடுபடுத்த பயன்படும் மைக்ரோவேவ் ஓவனில் குழந்தையை வைத்துள்ளார். இதனால், குழந்தையின் ஆடை மற்றும் அதனை சுற்றிவைக்கப்பட்டிருந்த துணி கருகி எரிந்த புகை வாசனை வந்துள்ளது.
குழந்தை பலி
அதனையடுத்து, இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில், சம்பவ இடம் விரைந்த போலீஸார், வீட்டின் மைக்கோவேவ் ஓவனில் படுகாயங்களுடன் குழந்தை இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே, குழந்தையை மீட்டு மருத்துவமனையில் பரிசோதித்ததில் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.
அதன்பின், குழந்தையின் தாய் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.