இறந்தே பிறந்த குழந்தை; அடக்கம் செய்யும் நேரத்தில் கதறி அழுததால் பரபரப்பு!

Assam
By Sumathi Oct 06, 2023 09:48 AM GMT
Report

இறந்து பிறந்ததாக அறிவிக்கப்பட்ட குழந்தை தகன மேடையில் உயிர் பிழைத்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.

இறந்த குழந்தை

அசாம், சில்சார் பகுதியை சேர்ந்தவர் ரத்தன் தாஸ். தனது கர்ப்பிணி மனைவியை அங்குள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். கர்ப்பகால சிக்கல் இருந்ததால் தாய் - சேய் இருவரில் ஒருவரை மட்டுமே காப்பாற்ற முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்.

இறந்தே பிறந்த குழந்தை; அடக்கம் செய்யும் நேரத்தில் கதறி அழுததால் பரபரப்பு! | Baby Declared Passed Away By Doctors Was Alive

மனைவியை என்னால் இழக்க முடியாது என கணவன் கூறியதால், அன்று இரவே அவரது மனைவிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதில், ஆண் குழந்தை ஒன்று இறந்து பிறந்ததாக, அவரிடம் ஒப்ப்டைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, உறவினர்களுடன் குழந்தையை அடக்கம் செய்ய சென்றுள்ளனர்.

நிகழ்ந்த அதிசயம்

இறுதிச் சடங்குகளுக்காக அட்டைப் பெட்டியை பிரித்து குழந்தையின் சடலத்தை தகன மேடையில் வைத்த நிலையில். திடீரென குழந்தை கதறி அழுதது. இதனால் அதிர்ச்சியடைந்தவர்கள் குழந்தையை உடனே மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இறந்தே பிறந்த குழந்தை; அடக்கம் செய்யும் நேரத்தில் கதறி அழுததால் பரபரப்பு! | Baby Declared Passed Away By Doctors Was Alive

இதற்கிடையில் தகவலறிந்த உறவினர்கள் மருத்துவமனைக்கு எதிராக போராட்டம் நடத்தியதோடு புகாருக் அளித்தனர். அதன் அடிப்படையில், மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மருத்துவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

காட்டுக்குள் மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர்.. தாயும், சேயும் பலி!

காட்டுக்குள் மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர்.. தாயும், சேயும் பலி!

அதில், 8 மணி நேரம் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்ட பிறகே குழந்தையின் இறப்பை உறுதி செய்ததாக விளக்கம் அளித்துள்ளனர்.