நல்லவேளை கல்யாணம் பண்ணிக்கல.. பப்லு பற்றி பேசிய முன்னாள் காதலி

Babloo Prithiveeraj
By Sumathi Aug 22, 2024 10:25 AM GMT
Report

சீத்தல் தான் எதற்காக பப்லுவை பிரிந்தேன் என்பது குறித்து பேசியுள்ளார்.

நடிகர் பப்லு 

சின்னத்திரை வெள்ளித்திரை என்று கலக்கி வந்தவர் நடிகர் பப்லு பிரித்விராஜ். சில மாதங்களுக்கு முன்பு பப்லு இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து விட்டார் என்ற செய்திகள் பரவி வந்தது.

babloo - seethal

இதற்கு விளக்கமளித்த பப்லு ஷீத்தல் என்ற அந்த பெண்ணை கூட்டிக்கொண்டு வந்து நான் இந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் நாங்கள் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறோம் எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பப்லு மட்டும் ஷீத்தல் இருவருமே தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை டெலிட் செய்தனர். இந்நிலையில் இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ள ஷீத்தல், எங்களுக்குள் என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம்.

2வது திருமணம் செய்வேன்.. ஆனால் அப்படி பெண்ணை அல்ல - வேதனையில் நடிகர் பப்லு!

2வது திருமணம் செய்வேன்.. ஆனால் அப்படி பெண்ணை அல்ல - வேதனையில் நடிகர் பப்லு!

ஷீத்தல் பேட்டி

ஆனால் அது ஒரு விஷயமே இல்லை. ஒரு கட்டத்தில் நாங்கள் பிரிய வேண்டும் என்று நினைத்து இருவரும் பிரிந்து விட்டோம். அது மட்டுமல்லாமல் காதலிக்கும் போது அவர் எனக்கு கொடுத்த அத்தனை பொருட்களையும் பிரித்விராஜிடமே நான் ஒப்படைத்து விட்டேன்.

நல்லவேளை கல்யாணம் பண்ணிக்கல.. பப்லு பற்றி பேசிய முன்னாள் காதலி | Babloo Ex Lover Seethal About Break Up

நல்லவேளை எங்களுக்கு திருமணம் நடக்கவில்லை, அதுவரைக்கும் சந்தோஷம். ஏனென்றால் எங்களுக்கு திருமணம் நடந்திருந்தால் அது இரு வீட்டாரையும் பாதிக்கும். அதை நினைத்து நான் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் அவரோடு லிவிங்கில் இருக்கும்போது திருமணத்திற்கும் காதலுக்கும் வயது ஒரு பிரச்சனையே கிடையாது என்று சொல்லி இருந்தேன்.

அதைத்தான் இப்போதும் சொல்கிறேன். ஒருவர் மீது காதல் வருவதற்கு வயது ஒரு காரணமே கிடையாது. சில காரணங்களை வெளியிலே வெளிப்படையாக சொல்ல முடியாது. அது வெளியே தெரியாமல் இருப்பதே நல்லது எனத் தெரிவித்துள்ளார்.