முதல் மனைவியுடன் விவாகரத்து இதனால் தான் - வேதனை தெரிவித்த நடிகர்

Tamil Cinema Divorce Babloo Prithiveeraj
By Sumathi Apr 14, 2023 02:30 PM GMT
Report

முதல் திருமண விவாகரத்து குறித்து நடிகர் பப்லு மனம் திறந்துள்ளார்.

 நடிகர் பப்லு

தமிழ் சினிமாவில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்தான் நடிகர் பப்லு ப்ரித்திவிராஜ். இவர் 1979ம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான ‘நான் வாழ வைப்பேன்’ என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதனையடுத்து, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ளார்.

முதல் மனைவியுடன் விவாகரத்து இதனால் தான் - வேதனை தெரிவித்த நடிகர் | First Marriage Divorce Babloo Prithiveeraj Reveals

அதேபோல், ரமணி வெர்சஸ் ரமணி, மர்ம தேசம், அரசி, ராஜ ராஜேஸ்வரி, வாணி ராணி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். சமீபத்தில் ‘கண்ணான கண்ணே’ சீரியலில் நடித்தார். 1994ம் ஆண்டு பீனா என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு 27 வயதில் அஹெத் என்ற மகன் உள்ளார்.

விவாகரத்து

இந்நிலையில் நடிகர் பப்லு, தனது முதல் மனைவி பீனா, தன்னை சாப்பிட்டாயா என்று கூட அக்கறையுடன் கேட்டது இல்லை. இதைப்பற்றி கேட்டால் பசித்தால் நீங்களே சாப்பிடப் போகிறீர்கள், இதையெல்லாம் கேட்க வேண்டுமா என்று பீனா கேட்பார்.

முதல் மனைவியுடன் விவாகரத்து இதனால் தான் - வேதனை தெரிவித்த நடிகர் | First Marriage Divorce Babloo Prithiveeraj Reveals

ஒரு நிகழ்ச்சியில் தானும் பீனாவும் கலந்துக் கொண்டபோது, உங்கள் கணவர் மிகவும் அழகாக இருப்பதாக தொகுப்பாளர் கூறினார். அதற்கு இவனா என பீனா கேட்டது தன்னை ரொம்பவே காயப்படுத்திவிட்டது. அந்த சம்பவத்துக்கு பிறகுதான் தங்களுக்குள் பிரச்சனை அதிகமானது என தெரிவித்துள்ளார். சமீபத்தில், 2வதாக 57 வயதான பப்லு 23 வயது பெண்ணான ஷீத்தலை திருமணம் செய்தது குறிப்பிடத்தக்கது.