உடல் முழுவதும் ஆசையா போட்ட டாட்டூவால் அலறும் மாடல் அழகி! ஏன் தெரியுமா?
உடல் முழுவதும் பச்சைக் குத்தி கொண்டதால் தன்னை புறக்கணிப்பதாக ஆஸ்திரேலிய மாடல் அழகி வருத்தம் தெரிவித்துள்ளார்.
ஆம்பர் லூக்
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மாடல் அழகி ஆம்பர் லூக்(27). இவர் தனது கண், காது உட்பட 98 சதவிகிதம் உடலை டாட்டூகளால் நிரப்பியுள்ளார். ஆஸ்திரேலியாவின் டிராகன் கேர்ள் என அழைக்கப்படும் இவர், டாட்டூகளுக்காக இதுவரை சுமார் 2,00,000 பவுண்ட்ஸ் செலவிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்திய மதிப்பின்படி, 1 கோடியே 91 லட்சம் ரூபாய் ஆகும். தனது ஆசைக்காக உடல் முழுவதும் டாட்டூ போட்டுக்கொண்டாலும் தற்போது அதற்காக வருந்தி வருகிறார். ஏனென்றால், அவரிடம் மற்றவர் காட்டும் பாகுபாடு மற்றும் புறக்கணிப்பே என தெரிவிக்கிறார்.
டாட்டூ பிரியை
இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், நான் மிகவும் அதிகமாக பச்சை குத்திக் கொண்டிருக்கிறேன், ஆனால் நான் யாருக்கும் தீங்கு செய்யவில்லை. ஒவ்வொருவருக்கும் தங்கள் கருத்துகளை கூற உரிமை உண்டு.
ஆனால் மக்கள் பொது வெளியில் கருணையற்ற கருத்துகளை வெளியிடும் போது அது வேதனையாக இருக்கிறது. குறிப்பாக டாட்டூ போட்டுக்கொண்டு தன் தோற்றத்தை அழித்துவிட்டாள் என்று கூறும்போது வருத்தமளிக்கிறது.
இந்த தோற்றத்தால் எனக்கு வேலை கிடைப்பதில் சிரமமாகத்தான் உள்ளது. ஆனால் இந்த டாட்டூக்களின் மீது சுகர் கோட் செய்யப் போவதில்லை. அது எனது வேலைவாய்ப்பு போன்ற விருப்பங்களுக்கு எதிர்மறையாக அமைந்தாலும் பரவாயில்லை என்று தெரிவித்துள்ளார்.