விராட் கோலி இல்லை..இவர்தான் மதிப்பு மிக்க வீரர் - அஸ்வின் கருத்து!
இந்திய மற்றும் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ஓய்வு குறித்து பேசியுள்ளார்.
அஸ்வின் கருத்து
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் தரவரிசை ஐசிசி பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வின் முதல் இடத்தில் இருந்து வருகிறார். மேலும் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 516 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார்.
ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்திய அணியின் தற்போதைய மதிப்புமிக்க வீரர் யார் என்று பேசியதவது, “இந்தியா எப்பொழுதும் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் அதிகம் செலுத்தும் நாடாகவே இருந்து வருகிறது இது எப்பொழுதும் மாறும் என்று நான் நினைக்கவில்லை.
மதிப்பு மிக்க வீரர்
ஆனால் நான் பும்ராவை கொண்டாடுவதில் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். அவர் ஒரு தலைமுறையின் பந்துவீச்சாளர். அவரை இன்னும் கொண்டாட வேண்டும். சென்னைவாசிகளான நாங்கள் பந்துவீச்சாளர்களை மிகவும் பாராட்டக் கூடியவர்களாக இருக்கிறோம்.
கடந்த நான்கு ஐந்து நாட்களுக்கு முன்பாக பும்ரா சென்னைக்கு ஒரு நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக வந்திருந்தார். அவருக்கு தமிழ்நாட்டில் ரஜினிக்கு கொடுக்கும் வரவேற்பை கொடுத்தோம்.
அவரை நாம் ஒரு சாம்பியன் ஆக நடத்த வேண்டும். நான் தனியாக பெயரிட விரும்பவில்லை, ஆனால் தற்பொழுது பும்ராதான் மிகவும் மதிப்பு வாய்ந்த வீரர்” என்று தெரிவித்துள்ளார்.