தவறான ரீடிங்..எகிறிய கரண்ட் பில்…மின் வாரிய ஊழியர் மீது தாக்குதல்

Viral Video Madhya Pradesh
By Thahir Sep 05, 2022 11:47 AM GMT
Report

தலைசுற்ற வைத்த கரண்ட் பில்லால் மின் வாரிய ஊழியரை அடித்து துவைத்த நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மின் வாரிய ஊழியர் மீது தாக்குதல் 

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் லக்ஷ்மிகஞ்ச் மண்டலத்தில் உள்ள சிகார்வார் பகுதிக்கு சென்ற மின்வாரிய ஊழியர் பிரிஜ் மோகன் மீட்டர் ரீடிங் எடுத்துவிட்டு திரும்பியுள்ளார்.

அப்போது அனுராக் குஷ்வாஹா மற்றும் சிலர் வழிமறித்துள்ளனர். மின் வாரிய ஊழியரிடம் தவறான ரீடிங் எடுத்துள்ளதால் அதிக மின் கட்டணம் வந்துள்ளது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் வாக்குவாதம் முற்றி மின் வாரிய ஊழியரை பிரிஜ் மோகனை அனுராக் குஷ்வாஹா மற்றும் சிலர் தாக்க தொடங்கினர்.

வழக்குப்பதிவு 

இதையடுத்து மின்வாரிய ஊழியர் பிரிஜ் மோகன், ஜனக்கஞ்ச் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில், குற்றம் சாட்டப்பட்ட நுகர்வோர் அனுராக் குஷ்வாஹா மற்றும் இருவர் மீது, அரசுப் பணியைத் தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில் மின்வாரிய ஊழியரை தாக்கியவர் மீது கைது நடவடிக்கை எடுக்க கோரி மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் சக ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரபரப்பு ஏற்பட்டது.