யார் செய்த வேலை இது? வைரலாகும் புகைப்படம்... அஸ்வினின் மனைவி டுவிட்
இந்திய வீரரான ரவிச்சந்திரன் அஸ்வினின் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படம் வைரலாகி வரும் நிலையில், யார் செய்த வேலை இது? என அவரது மனைவியான ப்ரீத்தி அஸ்வின் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றியடைந்தாலும், இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றியை தனதாக்கி கொண்டுள்ளது. இதற்கு முக்கியமான காரணமாக இருந்தது ரவிச்சந்திரன் அஸ்வினின் ஆட்டம் தான், அவர் சதமடித்தது வெற்றிக்கு துணையாக இருந்தது. இவரது வெற்றியை தமிழகமே கொண்டாடி வரும் நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வினின் மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டரில் பதிவிட்டு, யார் செய்த வேலை இது? என்று கேள்வி எழுப்பி உள்ளார் அவரது மனைவியான ப்ரீத்தி அஸ்வின்.
அதாவது, மாஸ்டர் திரைப்படத்தின் நடிகர் விஜய் வாயில் விரல் வைத்து 'உஷ்' என்பது போல் கொடுத்திருக்கும் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
அந்த போஸ்டரில் விஜய்யின் புகைப்படத்திற்கு பதிலாக அஸ்வின் புகைப்படத்தை மாற்றி வைத்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
