இந்த விஷயத்தில் இந்திய அணி பெரிய தவறு செய்துவிட்டது - கொதித்த அஸ்வின்!

Ravichandran Ashwin Indian Cricket Team
By Sumathi Feb 14, 2025 05:32 AM GMT
Report

இந்திய அணியில் இந்த குறை இருப்பதாக அஸ்வின் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

5 ஸ்பின்னர்கள்

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் ஜஸ்பரீத் பும்ராவை நீக்கி ஹர்ஷித் ராணாவையும், யாஷஸ்வி ஜெய்ஷ்வாலை நீக்கி வருண் சக்ரவர்த்தியையும் சேர்த்துள்ளனர்.

indian team

இதன் மூலம் அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் என 5 ஸ்பின்னர்கள் இருக்கின்றனர். ஆனால், 3 ஸ்பின்னர்களை மட்டுமே விளையாட வைக்க முடியும். எனவே எதற்காக 5 ஸ்பின்னர்களை சேர்த்திருக்கிறார்கள் என பலர் விமர்சித்து வருகின்றனர்.

ஆர்சிபி அணியின் புதிய கேப்டன் - விராட் கோலி என்ன சொல்லியிருக்கார் பாருங்க!

ஆர்சிபி அணியின் புதிய கேப்டன் - விராட் கோலி என்ன சொல்லியிருக்கார் பாருங்க!

அஸ்வின் அதிருப்தி

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள இந்திய அணி முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், ‘‘துபாய்க்கு 5 ஸ்பின்னர்களுடன் இந்தியா செல்ல உள்ளது. எதற்காக இத்தனை ஸ்பின்னர்கள்? 3-4 ஸ்பின்னர்களே போதுமானதுதான். ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் ஆகியோர் அபாரமான பார்மில் இருப்பதால், இந்த 2 பேருக்கும் நிச்சயம் இடம் கிடைக்கும்.

ashwin

மேலும், குல்தீப் யாதவையும் விளையாட வைக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை, வருண் சக்ரவர்த்தியை சேர்த்தால், ஒரு வேகப்பந்து வீச்சாளரை வெளியே அனுப்பிவிட்டு ஹர்திக் பாண்டியாவை 2ஆவது வேகப்பந்து வீச்சாளராக பயன்படுத்தும் நிலை ஏற்படும்.

ஒருவேளை 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாடும் நிலை ஏற்பட்டால், ஒரு ஸ்பின்னரை வெளியே அனுப்பிவிட்டு, இரண்டு ஸ்பின்னர்களுடன்தான் ஆட முடியும். துபாயில், ஸ்பின்னர்களுக்கு ஒத்துழைப்பு இருக்குமா? 5 ஸ்பின்னர்களை அணியில் சேர்த்திருப்பது, பிரச்சினையாகதான் பார்க்கிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.