பிப்ரவரி மாதத்துக்கான ஐசிசி விருதுக்கு அஸ்வின் தேர்வு
பிப்ரவரி மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த வீரர் விருதுக்கு இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினை தேர்வு செய்துள்ளது. ஆண்கள் மற்றும் மகளிர் கிரிக்கெட் ஆட்டங்களில் சிறப்பாகச் செயல்படும் வீரர்களை மாதந்தோறும் கெளரவித்து விருது வழங்கவதாக ஐசிசி அறிவித்திருந்தது.
சிறப்பாக விளையாடும் வீரர்களை ஆண்டு முழுவதும் அங்கீகரிக்கும் விதமாக விருது வழங்கப்படுவதாக விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிப்ரவரி மாதத்துக்கான விருதுக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் அஸ்வின் சிறப்பாக விளையாடினார்.
மூன்று டெஸ்ட் போட்டியில் விளையாடி 24 விக்கெட் வீழ்த்தியதுடன், 176 ரன்களும் அடித்தது குறிப்பிடத்தக்கது.