அஸ்வின் மிகப்பெரிய சொத்து: கோஹ்லி புகழாரம்

india team kohli ashwin
By Jon Mar 08, 2021 12:18 PM GMT
Report

இந்திய அணியின் கேப்டன் ஆன விராட் கோஹ்லி, தமிழக வீரரை தங்களுக்கு கிடைத்த சொத்து என்று கூறியுள்ளார். இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரில் இந்திய அணி 3-1 என்று முன்னிலை வகித்து தொடரைக் கைப்பற்றியதுடன், உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றது.

இந்நிலையில், இந்த தொடர் குறித்து இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி கூறுகையில், முதல் போட்டியில் தோல்வியடைந்த நாங்கள், அதே சென்னை மைதானத்திலேயே தோல்வியில் இருந்து மீண்டு வந்தது மகிழ்ச்சியையும், உத்வேகத்தையும் கொடுத்தது. இந்த தொடரில் டாஸ் மிக முக்கிய பங்காக இருந்தது.

தற்போது இந்திய அணிக்காக விளையாடி வரும் 11 வீரர்கள் மட்டுமல்ல, வாய்ப்பு கிடைக்காமல் வெளியில் அமர்த்தப்பட்டு வீரர்களும் மிக சிறப்பான வீரர்கள், இதுவே தற்போதைய இந்திய அணியின் மிகப்பெரும் பலமாக உள்ளது. ரிஷப் பண்ட், வாசிங்டன் சுந்தரும் மிக சிறப்பாக விளையாடினர், குறிப்பாக இக்கட்டான நேரத்தில் இருவரின் பங்களிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.

சர்வதேச அணிகள் அனைத்தும் திறமையானது, நாம் அதிகமாக உழைத்தால் மட்டுமே அவர்களை வீழ்த்த முடியும். இந்தியாவிலேயே போட்டி நடைபெற்றாலும் யாரையும் அவ்வளவு எளிதாக வீழ்த்திவிட முடியாது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மாவின் சிறப்பான ஆட்டம் தான் இந்த தொடரின் திருப்புமுனையாக நான் பார்க்கிறேன். அஸ்வின் எங்களின் மிகப்பெரும் சொத்தாக திகழ்ந்து வருகிறார் என்று கூறியுள்ளார்.