கோலியை இந்தியா மிஸ் செய்யாது; அவர் அசத்துவார் - அஸ்வின் கருத்து
இந்திய அணி இங்கிலாந்தில் விராட் கோலியை மிஸ் செய்யாது என்று அஸ்வின் கூறியுள்ளார்.
கோலி ஓய்வு
இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி களமிறங்குகிறது.
இந்நிலையில் இதுதொடர்பாக பேசியுள்ள முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், “கிரிக்கெட்டை விட மிகப்பெரிய ஒருவர் கிரிக்கெட்டில் விளையாடினார் அல்லது விளையாடப் போவதாக எனக்குத் தெரியவில்லை.
அஸ்வின் கருத்து
பூங்காவில் நடப்பவர்கள் அனைவரும் விளையாட்டிற்கு நல்லது செய்வதில்லை. அவர்களை வைத்து விளையாட்டு தான் நல்லது கெட்டதைச் செய்கிறது. விராட் கோலியை நான் விரும்புகிறேன்.
ஆனால் விளையாட்டுக்கு விளையாட வந்த அவர் விளையாடி விட்டு விளையாட்டிலிருந்து சென்று விட்டார். இந்த விளையாட்டை அவர் சிறந்த இடத்தில் விட்டுச் சென்றுள்ளார்.
தற்போது அந்த விளையாட்டை மற்றொருவர் முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.