ஆன்மீகத்திற்கு அல்ல...ஆரிய ஆதிக்கத்திற்கு தான் எதிரி!! முக ஸ்டாலின் உறுதி!!
சமூகவலைத்தள தன்னார்வலர்கள் சந்திப்பு கூட்டம் சென்னை ஷெனாய் நகரில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்திரனாக தமிழக முதல்வரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின் கலந்து கொண்டார்.
நீட் விலக்கு கையெழுத்து திட்டம்
அப்போது, நீட் விலக்கு எங்கள் இலக்கு கையெழுத்து திட்டத்தில் முதல் நபராக கையெழுத்திட்டு துவங்கி வைத்தார். பிறகு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் முக ஸ்டாலின், சமூக வளத்தங்கள் மூலம் மக்களின் கருத்துக்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடிகிறது என கூறி, நெகட்டிவ் பிரச்சாரம் மூலம் எதிரியை வீழ்த்துவதை விட பாசிட்டிவ் பிரச்சாரம் மூலம் நம்மை வளர்த்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
திராவிட இயக்கத்தை ஒழிக்க வேண்டும் என கூறிய பலரும் கடைசியில் இங்கு தான் வந்து அடைக்கலம் சேர்ந்தனர் என தெரிவித்த முக ஸ்டாலின், அது தான் வரலாறு என்றார். ராஜாஜி, மா.பொ.சி போன்றோர் தீவிரமாக எதிர்த்தவர்களாக இருந்த நிலையில், 1967-இல் திமுகவை ஆதரித்தார் ராஜாஜி என்றும், உதயசூரியன் சின்னத்தில் மைலாப்பூர் தொகுதியில் மா.பொ.சி போட்டியிட்டார் என சுட்டிக்காட்டினார்.
தலை நிமிரவைத்த இயக்கம் திமுக
ஜாதி, மதங்களின் பெயரால் மக்களை பிளவுப்படுத்தி படுத்திட வேண்டும் என முயன்று வரும் ஃபாசிச பாஜக ஒரு புறமும், அவர்களுக்கு பாதம் தாங்கிகளாக மற்றொரு புறத்தில் இருக்கும் அதிமுக த போன்றோரை தற்போது எதிர்த்து வருவதாக விமர்சித்தார்.
தமிழர்களை தலை நிமிர வைக்க பிறந்தது தான் திமுக என்றும் தலையை எடுக்க பிறந்த இயக்கமில்லை என குறிப்பிட்ட முதல்வர் முக ஸ்டாலின், மிசா, தடா போன்றவற்றால் திமுகவை ஒன்றும் செய்துவிட முடியாது என்பதால் பொய் கூறி வருகிறார்கள் என்றும் குற்றம்சாட்டினார்.
ஆரிய ஆதிக்கத்திற்கு தான் எதிரி
பாஜகவின் ஒரே வேலை, துர்கா ஸ்டாலின் எந்த கோவிலுக்கு போகிறார் என்பதில் தான் கவனம் செலுத்துவதாக குறிப்பிட்டு, தாங்கள் ஆரிய ஆதிக்கத்திற்கு தான் எதிரி என்றும் ஆன்மீகத்திற்கும் அல்ல என்றும் தெளிவுப்படுத்தினார் முதல்வர் முக ஸ்டாலின்.
ஆன்மீகத்தையும், அரசியலையும் பிரித்து பார்க்க தெரிந்த மக்கள் தான் தமிழக மக்கள் என கூறி, கோவிலை இடித்து விட்டார்கள் என கூறி வதந்தி பரப்புகிறார்கள் என்றார் முக ஸ்டாலின்.
1000 கோவில்களுக்கு குடமுழுக்கு செய்த ஆட்சி தான் திராவிட மடல் ஆட்சி என குறிப்பிட்டு, இதுவரை 5000 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்ட ஆட்சி தான் திராவிட மாடல் ஆட்சி என்றார்.
எதிரிகளின் பேச்சிற்கு சமூகவலைத்தளங்களில் மூலம் கணியமாக பதிலளியுங்கள் என கேட்டுக்கொண்ட முதல்வர், என் பேச்சு பிடித்திருந்தால் லைக் செய்வது மட்டுமன்றி, ஷேர் செய்யுங்கள் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.