அமலாக்கத்துறை சம்மன்!! தட்டிக்கழித்து பிரச்சாரத்திற்கு சென்ற அரவிந்த் கெஜ்ரிவால்!!
மதுபான கொள்கை விவகாரம் டெல்லி அரசியலில் பெரும் புயலை ஏற்படுத்தி வருகின்றது.
மதுபான கொள்கை விவகாரம்
டெல்லி அரசியலில் தற்போது பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது மதுபான கொள்கை. இது முறைகேடுகள் நடந்ததாக அம்மாநிலத்தின் துணை முதல்வர் மனிஷ் சிசோடியா கைதாகி சிறையில் இருக்கும் நிலையில், தற்போது வரை அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.
இந்நிலையில் தான் அதனை தொடர்ந்து அமலாக்கத்துறை இந்த விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியது. இன்று ஆஜராகும் படி அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கண்டுக்காத அரவிந்த் கெஜ்ரிவால்
ஆனால், ஆம் ஆத்மீயின் அரவிந்த் கெஜ்ரிவால், விசாரணை அமைப்புக்கு முன் ஆஜராவதை தவிர்த்துவிட்டு, சட்டசபை தேர்தலையொட்டி, மத்திய பிரதேசத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு (ஏஏபி) ஆதரவாக பிரச்சாரம் செய்ய அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளார் என கூறப்படுகிறது.
இது குறித்து ஆம் ஆத்மி வட்டாரம், மத்தியப் பிரதேசத்தின் சிங்ராலிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் செல்கிறார். அங்கு அவர் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உடன் சாலைக் கண்காட்சியில் பங்கேற்பார் என்றும் சிறிது நேரத்தில் அவர் மத்தியப் பிரதேசத்திற்குச் செல்வார் தெரிவித்துள்ளது.
அமலாக்கத்துறையின் சம்மனை தள்ளிவைத்து விட்டு, அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய பிரதேச மாநிலத்தின் பிரச்சரத்திற்கு செல்வது தற்போது தேசிய அரசியலில் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது.