கைது செய்யப்பட்ட இபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினர் விடுதலை
அனுமதியின்றி உண்ணாவிரதம் நடத்திய எதிக்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யபட்ட நிலையில் அவர்களை போலீசார் விடுவித்தனர்.
அதிமுகவினர் கைது
சட்டப்பேரவையில் அதிமுக எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமனம் செய்யக் கோரி சபாநாயகரிடம் கோரிக்கை வைத்து சட்டப்பேரவையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அவர்களை சபாநாயகர் உத்தரவின் பேரில் அவைக் காவலர்கள் வெளியேற்றினர். பின்னர் இன்று காலை அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது.
அங்கு வந்த போலீசார் அனுமதியின்றி உண்ணாவிரதம் நடத்த அனுமதிக்க மாட்டோம் எனக் கூறி அவர்களை கைது செய்தனர்.
விடுவிப்பு
இந்த நிலையில், போலீசார் கைது செய்த நிலையிலும் உண்ணாவிரதத்தை அதிமுகவினர் தொடர்ந்தனர். இதையடுத்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டவர்களை போலீசார் விடுவித்தனர்.
இதையடுத்து முனுசாமி பழச்சாறு கொடுக்கவே அதை எடப்பாடி பழனிசாமி வாங்கி பருகி உண்ணாவிரதத்தை முடித்த வைத்தார்.