இந்தியா எல்லையில் ராணுவத்தினரால் தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை - பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்!

terrorist dead Jammu Kashmir india army
By Jon Mar 23, 2021 05:04 PM GMT
Report

ஜம்மு- காஷ்மீரில் ராணுவத்தினர் மேற்கொண்ட அதிரடி தாக்குதலில் லஷ்கர் - இ - தொய்பா தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ஜம்மு - காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு உளவு தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து விரைந்து சென்ற அவர்கள், முன்ஹால் என்ற இடத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது வீடு ஒன்றில் மறைந்திருந்த தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி திடீரென துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதனையடுத்து, பாதுகாப்பு படையினர் தரப்பில் பதில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இருதரப்பினருக்கும் இடையே ஒரு மணி நேரம் நீடித்த துப்பாக்கி சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

விசாரணையில் 3 பேரும் லஷ்கர் - இ - தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. தீவிரவாதிகள் பதுங்கி இருந்த வீட்டில் இருந்து ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதே பகுதியில் மேலும் சில தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்துள்ள தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, வீடுகள் மற்றும் கட்டிடங்களில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.