மாபெரும் கெளரவம் - வைஷாலி, முகமது ஷமிக்கு அர்ஜூனா விருது!
இந்திய விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கான அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.
அர்ஜுனா விருது
விளையாட்டு துறையில் சாதனைபடைக்கும் வீரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு அர்ஜூனா விருது வழங்கி கெளரவித்து வருகிறது.
அதன்படி, இந்த ஆண்டு அதன்படி கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, தமிழக செஸ் வீராங்கனை ஆர்.வைஷாலி உள்பட 26 பேருக்கு அர்ஜுனா விருதுகள் அறிவிக்கப்பட்டன. தொடர்ந்து, டெல்லியில் அர்ஜுனா விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திரவுபதி முர்மு
அதில், தமிழகத்தைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி, இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அர்ஜுனா விருதை வழங்கி கெளரவித்தார்.
இந்த ஆண்டு அர்ஜுனா விருது பெறும் 26 விளையாட்டு வீரர்களில் ஒரே கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை முகமது ஷமி பெற்றுள்ளார்.
இதே போன்று மற்ற விளையாட்டு வீரர்களும், வீராங்கணைகளும் அர்ஜுனா விருதை குடியரசுத் தலைவரிடம் இருந்து பெற்றுக் கொண்டனர்.