சிறந்த கிரிக்கெட் வீரர், வீராங்கனை விருது - ஐசிசி அறிவித்த அந்த வெற்றியாளர் யார்ன்னு தெரியுமா?

Cricket
By Nandhini Oct 10, 2022 12:21 PM GMT
Report

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்களை மாதந்தோறும் கவுரவிக்கும் வகையில் ஐசிசி தேர்வு செய்து விருதை அறிவித்து கவுரவித்து வருகிறது.

வெற்றியாளர்களை அறிவித்த ஐசிசி 

இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்களின் வெற்றியாளர்களை ஐசிசி இன்று அறிவித்திருக்கிறது.

பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரராக அறிவிக்கப்பட்டார். டி20 தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள ரிஸ்வான் கடந்த மாதம் ஆசிய கோப்பை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்து முடிந்த 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

பெண்களுக்கான சிறந்த வீராங்கனைகள் பட்டியலில் இந்தியாவின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், இந்திய துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் வங்காளதேச அணியின் கேப்டன் நிகார் சுல்தானா ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.

இதில் சிறந்த வீராங்கனையாக இந்தியாவின் ஹர்மன்பிரீத் கவுர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.  

sports-cricket-icc