சித்திரையில் பிறந்ததால் கடன் வரும் - மூட நம்பிக்கையில் பேரனை கொன்ற தாத்தா

Crime Ariyalur
By Karthikraja Jun 17, 2024 10:35 AM GMT
Report

மூட நம்பிக்கையில் பிறந்து 38 நாட்களே ஆன பேரனை தாத்தா கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டான் அருகே உள்ள உட்கோட்டையை சேர்ந்தவர் வீரமுத்து மகள் சங்கீதா. இவருக்கு கும்பகோணத்தையா சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கும் திருமணம் ஆகியுள்ளது. இந்த தம்பதிக்கு திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில் 38 நாட்களுக்கு முன் அழகிய குழந்தை பிறந்துள்ளது. 

ariyalur police

இந்த நிலையில் கடந்த 14 ம் தேதி, குழந்தையை காணவில்லை என்று குழந்தையின் பெற்றோர் தேடிய பொழுது குழந்தை தண்ணீர் தொட்டியில் மூழ்கி மர்மமான முறையில் இறந்தது கண்டறியப்பட்டது. இது குறித்து ஜெயங்கொண்டான் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் குழந்தை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

[BRLVD7Y ]

காவல் துறை விசாரணை

இதன்பின் குடும்பத்தில் உள்ள அனைவரையும் காவல் நிலையம் அழைத்தது விசாரணை செய்தனர் காவல் துறையினர். இதில் குழந்தையின் தாத்தா மாரிமுத்து முன்னுக்கு பின் முரணான கருத்துகளை தெரிவித்ததால் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

ariyalur veeramuthu

அப்பொழுது குழந்தை சித்திரை மாதம் பிறந்துள்ளதால் ஜாதகப்படி தன் உயிருக்கு ஆபத்து என்றும், கடன் தொல்லைகள் ஏற்படும் என்பதாலும், குழந்தையை டிரம்மில் உள்ள நீரில் அழுத்தி கொன்றதாக வாக்கு மூலம் அளித்துள்ளார்.