உஷாரு.. முக்கிய தரவுகள் திருடப்படலாம்; அலறும் ஆப்பிள் அலெர்ட் - பரபர விளக்கம்!

Apple Delhi
By Sumathi Nov 01, 2023 03:53 AM GMT
Report

ஐபோனில் வந்த குறுஞ்செய்தியால் எதிர்க்கட்சி எம்பிக்கள் பதற்றமடைந்துள்ளனர்.

அலெர்ட் மெசேஜ்

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிவசேனா(உத்தவ் தாக்கரே) எம்.பி. பிரியங்கா சதுர்வேதி,

உஷாரு.. முக்கிய தரவுகள் திருடப்படலாம்; அலறும் ஆப்பிள் அலெர்ட் - பரபர விளக்கம்! | Apple Messages Sent Opposition Leaders

ஆம் ஆத்மி எம்.பி. ராகுல் சத்தா, காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா உள்ளிட்டோரின் கைப்பேசிகளுக்கு, “உங்கள் ஆப்பிள் கைப்பேசி அரசு உதவிபெறும் அமைப்பால் தாக்குதல் நடத்தக்கூடும்.

பதறிய  எம்பிக்கள்

அவ்வாறு உங்கள் கைப்பேசி தாக்குதலுக்கு உள்ளானால், கைப்பேசியில் உள்ள முக்கிய தரவுகள் திருடப்படலாம். உங்கள் கைப்பேசியின் கேமரா மற்றும் மைக்ரோபோன்களைக் கூட அவர்களால் அணுக முடியும்” என்று குறுஞ்செய்தி வந்துள்ளது.

apple alert message

இதனையடுத்து அவர்கள் செல்போன்களை ஒட்டுக்கேட்பதாக மத்திய அரசை குற்றம்சாட்டினர். இதற்கு அரசு மறுப்பு தெரிவித்து கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இதுகுறித்து ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், “கிட்டத்தட்ட 150 நாடுகளில் உள்ள தனி நபர்களின் செல்போன்களுக்கு அச்சுறுத்தல் அறிவிப்புகள் அனுப்பப்பட்டுள்ளன.

எம்.பி.க்கள் எண்ணிக்கை அதிகரிப்பு - தென் மாநிலங்களுக்கு பாதிப்பு?

எம்.பி.க்கள் எண்ணிக்கை அதிகரிப்பு - தென் மாநிலங்களுக்கு பாதிப்பு?

ஆப்பிள் அச்சுறுத்தல் அறிவிப்புகள் தவறான எச்சரிக்கையாக இருக்கலாம். அல்லது, சில தாக்குதல்கள் கண்டறியப்படாமல் இருக்கலாம். அச்சுறுத்தல் அறிவிப்புகளை வெளியிடுவதற்கு என்ன காரணம் என்பதைப் பற்றிய தகவலை எங்களால் வழங்க முடியவில்லை.

ஏனென்றால் எதிர்காலத்தில் இதுபோன்று தாக்குதல் நடத்துபவர்களின் நடத்தையை மாற்றி அமைக்க உதவும்.” எனத் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது.