ஆளுநர் மற்றும் அமலாக்கத்துறை செயல்பாடுகள் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு சாதகம் - எம்.பி கார்த்திக் சிதம்பரம்!
அமலாக்கத்துறை ரெய்டு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
ரெய்டு
தமிழ்நாட்டில் சமீப காலமாக அமலாக்கத்துறை அதிரடியாக சோதனைகள் நடத்தி வருகிறது. தற்பொழுது தி.மு.க கட்சியின் உயர்கல்வி துரையின் அமைச்சர் பொன்முடியின் வீடு மற்றும் இவருக்கு சம்மந்தப்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
இதனால் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினரான கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அதில் அமலாக்கத்துறை தேவையில்லாத ஒன்று. சோதனை கைது என்பதெல்லாம் கண் துடைப்புத்தான். சம்மன் மூலமாகவே அமலாக்கத்துறை விசாரணை நடத்தலாம். யாரோ ஒருவர் ரசிப்பதற்காகவே இப்படி சோதனை நடத்துகிறார்கள்" என்று கூறியுள்ளார்.
பேட்டி
இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "ஆயுத கடத்தல், போதை மருந்து விற்பனை, தீவிரவாதம், ஆள்கடத்தல் போன்ற சட்ட விரோத செயல்களின் மூலம் பணம் பரிவர்த்தனை நடைபெற்றால் அதனை கண்டறியத்தான் அமலாக்கத்துறை உருவாக்கப்பட்டது.
அதனை விடுத்து அமலாக்கத்துறையை பாஜக அரசு எதிர்க்கட்சிகளுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தி வருகிறது. உண்மையான வழக்கு, விசாரணை என்றால் அமலாக்கத்துறை சம்மன் கொடுத்து விசாரிக்க வேண்டும், ரெய்டு என்பது முறையானது அல்ல.
ஆளுநர் மற்றும் அமலாக்கத்துறையின் செயல்பாடுகள் வரும் தேர்தலில் காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கு சாதகமாக அமையும். எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைப்பது எளிதானது அல்ல. சில மாநிலங்களில் சிக்கல் உள்ளது, தேர்தல் வரும்போது காங்கிரஸை மையப்படுத்தி கூட்டணி அமையும்" என்று கூறியுள்ளார்.