ஓட்டுபோடும் உரிமை உள்ள யார் வேண்டுமானாலும் முதலமைச்சர் ஆகலாம் - பிரேமலதா பேச்சு!
ஓட்டுபோடும் உரிமை உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் முதலமைச்சர் ஆகலாம் என பிரேமலதா தெரிவித்துள்ளார்.
பிரேமலதா
காஞ்சிபுரத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவரிடம் பட்டியலினத்தை சேர்ந்த ஒருவர் எந்த சூழலிலும் எந்த மாநிலத்திலும் முதல்வராக வர முடியாது என வி.சி.க. தலைவர் திருமாவளவன் கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
முதலமைச்சர்
அதற்கு பதிலளித்த பிரேமலதா, 2026 சட்டமன்ற தேர்தலுக்காக தே.மு.தி.க. தயாராகி வருகிறது. தே.மு.தி.க. எப்போதும் சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி ஆகும்.
ஓட்டுபோடும் உரிமை உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் முதல்-அமைச்சர் ஆகலாம். ஆனால் அவர்களை தேர்ந்தெடுக்க வேண்டியவர்கள் மக்கள்தான் என்று கூறினார்.