IAS பயிற்சியை நிறுத்தி... டீ விற்று ஆண்டுக்கு ரூ.150 கோடி சம்பாதிக்கும் இளைஞர்கள்!

Delhi Madhya Pradesh
By Sumathi May 19, 2023 04:25 AM GMT
Report

டீ கடை மூலம் ஆண்­டுக்கு ஏறக்­கு­றைய ரூ.150 கோடி அள­வு சம்பாதித்து வருவதாக இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

டீ கடை

மத்­தி­யப் பிர­தேசம், இந்­தூர் பகு­தி­யைச் சேர்ந்­த­வர் ஆனந்த் நாயக். தொழில் தொடங்க விரும்பியதால் அனு­பவ் தூபே என்ற நண்­ப­ரின் உத­வியை நாடி­யுள்­ளார். இதனால், டெல்­லி­யில் ஐஏ­எஸ் தேர்­வுக்­காகப் பயிற்சி பெற்­று வந்த அனுபவ் தூபே தனது படிப்பை அப்­ப­டியே பாதி­யில் நிறுத்திவிட்டு இந்­தூர் வந்­துள்­ளார்.

IAS பயிற்சியை நிறுத்தி... டீ விற்று ஆண்டுக்கு ரூ.150 கோடி சம்பாதிக்கும் இளைஞர்கள்! | Anubhav Dubey Created Rs 150 Crore Of Tea Shop

தொடர்ந்து, இருவரும் தங்­க­ளி­ட­மி­ருந்த மூன்று லட்­சத்தை முதலீடாகக் கொண்டு ‘சாய் சுட்டா பார்’ என்ற தேநீர்க் கடையைத் திறந்துள்­ள­னர். அங்கு, கண்­ணா டிக் கோப்­பை­க­ளுக்குப் பதி­லாக மண் குடு­வை­யில் மட்­டுமே தேநீர் வகைகளை வழங்கியுள்ளனர்.

150 கோடி வருமானம்

இதனாலேயே மக்­கள் மத்தியில் நல்ல வர­வேற்­பைப் பெற்­றுள்ளனர். கடந்த 2016ல் தொடங்­கப்­பட்ட இந்த தேநீர்க் கடை, தற்­போது நாடு முழு­வ­தும் 195 நக­ரங்­களில் 400க்கும் அதி­க­மான கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது.

IAS பயிற்சியை நிறுத்தி... டீ விற்று ஆண்டுக்கு ரூ.150 கோடி சம்பாதிக்கும் இளைஞர்கள்! | Anubhav Dubey Created Rs 150 Crore Of Tea Shop

முதல் கடையில் கிடைத்த லாபத்­தைக் கொண்டு அடுத்­தடுத்த கிளை­க­ளைத் தொடங்கியுள்ளனர். தற்­போது ஆண்­டுக்கு ரூ.150 கோடி வரு­வாய் ஈட்டி வரு­கின்­ற­னர். மேலும், திய கிளைகளில் ஆத­ர­வற்­ற­வர்­கள், மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள், மூன்­றாம் பாலி­னத்­தவர்­க­ளுக்கு வேலை­வாய்ப்­பு­களை வழங்கி வருகின்றனர்.