திரு 29 பைசா பிரதமரா..? அவரு கஞ்சா உதயநிதி - அண்ணாமலை கடும் தாக்கு
பிரதமர் மோடியை உதயநிதி விமர்சத்த நிலையில், அவரை அண்ணாமலை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
உதயநிதி விமர்சனம்
தேர்தல் பிரச்சாரம் தமிழகத்தில் சூடுபிடித்துள்ளது. கட்சியின் தலைவர்கள் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் சூழலில், வார்த்தை மோதல்களும் அதிகரித்துள்ளது.
பிரச்சாரத்தின் போது தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் புதியதாக பெயர் வைத்துள்ளார்கள் என குறிப்பிட்டு "திரு. 29 பைசா பிரதமர்" என்றார்.
அதற்கு காரணமாகவும் அவர், வரிப்பணமாக தமிழகம் 100 ரூபாய் அளித்தால் மத்திய அரசு திரும்ப வரும் 29 பைசா தருவதாகவும் சாடினார்.
கஞ்சா உதயநிதி
உதயநிதியின் இந்த பிரச்சாரம் பரவலான நிலையில், அதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார்.
பிரச்சாரத்தின் போது பேசிய அவர், பிரதமரை 29 பைசா என அழைக்கும் உதயநிதிக்கு நமது தொண்டர்கள் புதிய பெயர் வைத்துள்ளார்கள் என குறிப்பிட்டு, அதாவது கஞ்சா உதயநிதி என்றும் கூறினார்.
அதற்கு காரணமாக, ஜாஃபர் சாதிக் கஞ்சா விற்பனை செய்பவர்கள் பலரும் அறிவாலய வாசலில் தான் காத்திருப்பார்கள் என்று சுட்டிக்காட்டினார் கடுமையாக விமர்சித்துள்ளார் அண்ணாமலை.