ஓசியில் வாழும் கனிமொழி - பிரதமரை குறித்து பேச தகுதியில்லை - அண்ணாமலை
பிரதமர் மோடியை கடுமையாக திமுகவின் கனிமொழி விமர்சித்துள்ள நிலையில், அதற்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
கனிமொழி விமர்சனம்
அடிக்கடி தமிழகத்திற்கு தேர்தலுக்காக பிரதமர் மோடி வந்து செல்கிறார் என விமர்சனத்தை திமுகவினர் தொடர்ந்து வைத்து வருகின்றனர்.
இது குறித்து பேசும் போது, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தமிழ்நாட்டிற்கு வருவதல்ல, அவர் இங்கு குடியேறினாலுமே மக்கள் அவருக்கு வாக்களிக்கமாட்டார்கள் என விமர்சித்திருந்தார்.
அண்ணாமலை பதிலடி
இது குறித்து இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். அவர் பேசியது வருமாறு,
அப்பா கட்டி கொடுத்த வீட்டில் வாழும் அவருக்கு பிரதமர் பற்றி பேசும் தகுதி இல்லை. அனைவரும் உழைத்து சம்பளம் வாங்குகிறார்கள், கனிமொழி என்ன உழைக்கிறார்கள்.
அப்பாவின் பெயரை வைத்து ஓசியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
கருணாநிதி என்ற பெயரை எடுத்து விட்டால் கனிமொழி யார்? அப்பா பெயரை வைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் கனிமொழி, பிரதமர் சென்னை வந்து வாடகை வீடு எடுத்து தங்க வேண்டும் என்று பேசுவதற்கு முன் தனது முகத்தை கண்ணாடியில் பார்க்க வேண்டும்.
இவ்வாறு அண்ணாமலை பேசினார்.