பழனிசாமி ஒரு துரோகி; போனில் அழைத்து என்னிடம் சொன்ன அந்த விஷயம் - அண்ணாமலை!
நம்பிக்கை துரோகி என்றால் அது எடப்பாடி பழனிசாமிதான் என்று அண்ணாமலை விமரிசித்துள்ளார்.
பழனிசாமி ஒரு துரோகி
விக்கிரவண்டியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்தித்து பேசினார். அப்போது அவர், அதிமுக கோட்டை எனக்கூறும் கோவையில் 3 சட்டமன்ற தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. நம்பிக்கை துரோகி என்ற பெயர் ஒருவருக்கு பொருந்தும் என்றால் எடப்பாடி பழனிசாமிக்குத் தான்.
எடப்பாடி பழனிசாமியை, பிரதமர் மோடி பக்கத்தில் அமர வைத்தார்; ஆனால் அக்கரைக்கு இக்கரை பச்சை என நினைத்து பாஜகவை வேண்டாமென ஒதுக்கிய ஈபிஎஸ், நாடாளுமன்ற தேர்தலில் பல இடங்களில் டெபாசிட் இழந்தார்அங்கீகாரம் கொடுத்த பிரதமர் மோடியின் முதுகில் குத்திய துரோகி எடப்பாடி பழனிசாமி.
அண்ணாமலை
ஈரோடு இடைத்தேர்தலின்போது எடப்பாடி பழனிசாமி என்னிடம் தொலைபேசி வாயிலாக பேசினார். அப்போது ஈரோடு என்னுடையை கோட்டை; அதனால் நாங்கள் அங்கு போட்டியிடுகிறோம், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வேட்பாளரை நிறுத்த வேண்டாம் அவரிடம் கூறுங்கள் என என்னிடம் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
தோல்வியடைவோம் என தெரிந்தும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட்டது ஏன்?. தற்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடாததற்கு புதுப் புது காரணங்கள் கண்டிபிடித்து கூறுகிறார் எடப்பாடி பழனிசாமி.
இபிஎஸ் தலைமையில் எத்தனை தேர்தல்களில் அதிமுக தோல்வியடைந்துள்ளது; எடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்வு செய்யப்பட்டு முதலமைச்சர் ஆனவரா? அ.தி.மு.க., முன்பு இருந்ததைப் போல் இல்லை; மெல்ல மெல்லக் கரையத் தொடங்கிவிட்டது என்றார்.