பழனிசாமி ஒரு துரோகி; போனில் அழைத்து என்னிடம் சொன்ன அந்த விஷயம் - அண்ணாமலை!

ADMK BJP K. Annamalai Edappadi K. Palaniswami
By Swetha Jul 05, 2024 09:28 AM GMT
Report

நம்பிக்கை துரோகி என்றால் அது எடப்பாடி பழனிசாமிதான் என்று அண்ணாமலை விமரிசித்துள்ளார்.

பழனிசாமி ஒரு துரோகி

விக்கிரவண்டியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்தித்து பேசினார். அப்போது அவர், அதிமுக கோட்டை எனக்கூறும் கோவையில் 3 சட்டமன்ற தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. நம்பிக்கை துரோகி என்ற பெயர் ஒருவருக்கு பொருந்தும் என்றால் எடப்பாடி பழனிசாமிக்குத் தான்.

பழனிசாமி ஒரு துரோகி; போனில் அழைத்து என்னிடம் சொன்ன அந்த விஷயம் - அண்ணாமலை! | Annamalai Slams Edappadi Palaniswami

எடப்பாடி பழனிசாமியை, பிரதமர் மோடி பக்கத்தில் அமர வைத்தார்; ஆனால் அக்கரைக்கு இக்கரை பச்சை என நினைத்து பாஜகவை வேண்டாமென ஒதுக்கிய ஈபிஎஸ், நாடாளுமன்ற தேர்தலில் பல இடங்களில் டெபாசிட் இழந்தார்அங்கீகாரம் கொடுத்த பிரதமர் மோடியின் முதுகில் குத்திய துரோகி எடப்பாடி பழனிசாமி.

அண்ணாமலை மெத்தபடித்தவர்; வெறும் வாயால் வடை சுடுவார்...எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

அண்ணாமலை மெத்தபடித்தவர்; வெறும் வாயால் வடை சுடுவார்...எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

அண்ணாமலை

ஈரோடு இடைத்தேர்தலின்போது எடப்பாடி பழனிசாமி என்னிடம் தொலைபேசி வாயிலாக பேசினார். அப்போது ஈரோடு என்னுடையை கோட்டை; அதனால் நாங்கள் அங்கு போட்டியிடுகிறோம், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வேட்பாளரை நிறுத்த வேண்டாம் அவரிடம் கூறுங்கள் என என்னிடம் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

பழனிசாமி ஒரு துரோகி; போனில் அழைத்து என்னிடம் சொன்ன அந்த விஷயம் - அண்ணாமலை! | Annamalai Slams Edappadi Palaniswami

தோல்வியடைவோம் என தெரிந்தும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட்டது ஏன்?. தற்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடாததற்கு புதுப் புது காரணங்கள் கண்டிபிடித்து கூறுகிறார் எடப்பாடி பழனிசாமி.

இபிஎஸ் தலைமையில் எத்தனை தேர்தல்களில் அதிமுக தோல்வியடைந்துள்ளது; எடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்வு செய்யப்பட்டு முதலமைச்சர் ஆனவரா? அ.தி.மு.க., முன்பு இருந்ததைப் போல் இல்லை; மெல்ல மெல்லக் கரையத் தொடங்கிவிட்டது என்றார்.