தற்குறி பழனிசாமி போல்.. மானம்கெட்டு பதவி வாங்கியவன் நான் அல்ல -அண்ணாமலை ஆவேசம்!

Tamil nadu Chennai K. Annamalai Edappadi K. Palaniswami
By Swetha Aug 26, 2024 03:01 AM GMT
Report

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அதிமுக மொதுசெயளாலரான எடப்படி பழனிசாமியை கடுமையாக சாடியுள்ளார்.

அண்ணமலை 

சென்னையில் தமிழக பாஜக சார்பில் ‘தமிழகம் மீட்போம், தளராது உழைப்போம்’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தற்குறி பழனிசாமி போல்.. மானம்கெட்டு பதவி வாங்கியவன் நான் அல்ல -அண்ணாமலை ஆவேசம்! | Annamalai Slams Edappadi Palanisami On A Pressmeet

அதில் அண்ணாமலை, மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு உரையாற்றினர். அப்போது பேசிய அண்ணாமலை, “திராவிடக் கட்சிகள் 70 ஆண்டுகளாக தமிழகத்தை சின்னாபின்னமாக்கி உள்ளன.

காமராஜர், எம்ஜிஆர் இருவரும் நேர்மையான ஆட்சியை கொடுத்தனர். தற்போது தமிழகம் பின்னோக்கி செல்கிறது. தமிழகத்தில் மட்டும்தான் ஒரு குடும்பத்துக்காக வேலை செய்கிறார்கள். அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு போன்றோர் இருக்கும்போது,

தேர்தல் தோல்வி எதிரொலி - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றமா?

தேர்தல் தோல்வி எதிரொலி - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றமா?

 பழனிசாமி போல்..

அரியணை உதயநிதிக்கு சென்றால் கலவரம் வெடிக்கும் என்பதை ரஜினிகாந்த் தனது பேச்சில் சுட்டிக்காட்டி இருக்கிறார். திமுகவினர் பழநியில் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். சனாதன தர்மத்தை வேரறுப்போம் எனக் கூறியவர்கள்,

தற்குறி பழனிசாமி போல்.. மானம்கெட்டு பதவி வாங்கியவன் நான் அல்ல -அண்ணாமலை ஆவேசம்! | Annamalai Slams Edappadi Palanisami On A Pressmeet

பழநிக்கு பால்காவடி எடுப்பதற்கு பதிலாக, அரசியல் காமெடி செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழ் கலாச்சாரத்தை சீரழித்தவர்களை முருகன் தண்டிப்பார்.பாஜக தமிழகத்தில் ஆட்சிக்கு வர வேண்டும் என்றால், சொந்த பலத்தில் நிற்க வேண்டும். நமக்கு திமுக, அதிமுக இருவரும் எதிரிகள்தான்.

பழனிசாமி என்னைப் பற்றியும், கட்சியை பற்றியும் சில கருத்துகளை தெரிவித்துள்ளார். முன்னொரு காலத்தில் சிலுவம்பாளையத்தில் நடந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய நபர் ஒருவர் பின்னர் திமுக அமைச்சரின் தயவால் அந்த வழக்கை உடைத்து சிலுவம்பாளையம் பஞ்சாயத்து

தேர்தலில் நின்று தோற்றவர்தான் இந்த பழனிசாமி. எனக்கு நேர்மை பற்றி சொல்லித் தர எடப்பாடி பழனிசாமிக்கு அருகதை இல்லை. தவழ்ந்து காலில் விழுந்து பதவி வாங்கியவன் நான் அல்ல, மான்முள்ள விவசாயி மகன் நான். தற்குறி பழனிசாமி போல் மானம்கெட்டு பதவி வாங்கவில்லை.

ஆவேசம்..

தமிழ்நாட்டில் மிக பெரிய டெண்டர் கட்சியாகவும், கூவத்தூரில் ஏலம் விட்டு எம்.எல்.ஏக்களுக்கு சம்பளம் கொடுத்து ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு என்னைப்பற்றி பேச என்ன தகுதி உள்ளது? கூட்டணிக் கட்சி தலைவராககூட பழனிசாமியை நான் ஏற்றது இல்லை.

தற்குறி பழனிசாமி போல்.. மானம்கெட்டு பதவி வாங்கியவன் நான் அல்ல -அண்ணாமலை ஆவேசம்! | Annamalai Slams Edappadi Palanisami On A Pressmeet

பழனிசாமி எனக்கு பாடம் எடுக்க வேண்டாம். திராவிட கட்சிகளை அகற்ற பாஜகவால் மட்டுமே முடியும். உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி முதல் ஊராட்சி வரை 1 லட்சத்து 12 ஆயிரம் இடங்களில் பாஜக தனித்து நிற்கும்.

வரும் செப்.1-ம் தேதி முதல் பாஜகவின் உறுப்பினர் சேர்க்கை முகாம் தொடங்குகிறது. அன்றைய தினம் தமிழகத்தில் 10 லட்சம் பேரையாவது கட்சியில் சேர்க்க வேண்டும். 2 மாதத்தில் 1 கோடி பேரை உறுப்பினர்களாக சேர்ப்பது என்ற இலக்கை எட்ட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.