அதிமுகவுடன் கூட்டணி என்றால் ராஜினாமா தான்..திட்டவட்டமாக சொன்ன அண்ணாமலை
இன்று டெல்லியில் தேசிய தலைவர்களை சந்தித்து வரும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால், தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக திட்டவட்டமாக கூறியுள்ளார் என தகவல்கள் வெளிவநதுள்ளது.
தமிழக பாஜக
தமிழக பாஜக கட்சி முன் இல்லாத அளவிற்கு தற்போது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. அதற்கு முக்கிய காரணம் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தான். கூட்டணியில் இருக்கும் போதே முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, அண்ணா போன்றோர் குறித்து சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்த அவர் தொடர்ந்து திமுக அரசை கண்டித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார்.
கூட்டணி முறிவடைந்ததை அடுத்து அவர் பதவியில் இருந்து மாற்றப்படுவார் என பல தரப்பட்ட கருத்துக்கள் கூறப்படும் நிலையில், அவ்வாறு அவர் மாற்றப்பட்டால் அது பெரிய சிக்கலையே அக்கட்சிக்கு தமிழகத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஏற்படுத்தும்.அதிமுக தாமாக கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில், பாஜக தற்போது அடுத்தக்கட்ட தேர்தல் நடவடிக்கைகளில் தமிழகத்தில் தீவிரம் காட்டவேண்டி உள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து கொலையாளிகள்,குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகின்றனர் - அண்ணாமலை குற்றச்சாட்டு!
அண்ணாமலை திட்டவட்டம்
தற்போது டெல்லியில் கட்சியின் தேசிய தலைவர்களை சந்தித்து மாநில அரசியல் சூழல் குறித்து பேசி வரும் அண்ணாமலை, விரைவில் தமிழகம் திரும்பவுள்ளார்.
இதில் டெல்லியில், நடைபெற்று வரும் சந்திப்பில், அண்ணாமலை தேசிய தலைவர்களிடம் அதிமுகவுடன் கூட்டணி என்றால் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக உறுதியாக கூறியிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும், தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலம் இருக்கும் சூழலில் அது குறித்தும் அவர் மேற்கொள்ள பணிகள் குறித்து அண்ணாமலை தேசிய தலைவர்களிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.