மது அருந்திவிட்டு அந்த வேலையை பார்க்கணுமா? அமைச்சர் முத்துசாமிக்கு அண்ணாமலை கண்டனம்
மது குறித்த சர்ச்சை கருத்துக்கு அமைச்சருக்கு அண்னாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
முத்துசாமி கருத்து
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி, தவிர்க்க முடியாத காரணங்களாலேயே கடுமையான பணி செய்வோர் காலையில் மது அருந்துகிறார்கள். காலையிலேயே மது அருந்துவோரை குடிகாரர்கள் என்று சொல்லக் கூடாது என தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பகிர்ந்துள்ள ட்விட்டர் பதிவில், ‘காலையிலேயே ஏன் மது விற்பனை செய்ய வேண்டும் என்ற ஆய்வுக்கு, அமைச்சர் முத்துசாமி ஊடகங்களில் கொடுத்த விளக்கம் கண்டு மிகுந்த வருத்தப்படுகிறேன்.
அண்ணாமலை கண்டனம்
தூய்மைப் பணியாளர்கள், கைகளால் சாக்கடைக் கழிவுகளை அகற்றும் நிலையை மாற்ற, மாற்று வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டுமே தவிர, அதற்கான தீர்வு காலையில் மது விற்பது அல்ல. கைகளால் கழிவுகள் அகற்றும் பணியில், மது அருந்திவிட்டு ஈடுபடச் சொல்கிறாரா என்ற கேள்வி எழுகிறது.
காலையிலேயே ஏன் மது விற்பனை செய்ய வேண்டும் என்ற ஆய்வுக்கு, அமைச்சர் திரு. முத்துசாமி அவர்கள் ஊடகங்களில் கொடுத்த விளக்கம் கண்டு மிகுந்த வருத்தப்படுகிறேன். தூய்மைப் பணியாளர்கள், கைகளால் சாக்கடைக் கழிவுகளை அகற்றும் நிலையை மாற்ற, மாற்று வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டுமே தவிர, அதற்கான… pic.twitter.com/edHrli7U2E
— K.Annamalai (@annamalai_k) July 17, 2023
தமிழக அரசு, சாராய விற்பனையைப் பெருக்குவதில் கவனத்தைச் செலுத்தாமல், மத்திய அரசின் தூய்மைப் பணியாளர்களுக்கான நலத் திட்டங்களை அவர்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.