பாலியல் சீண்டலில் ஈடுப்பட திமுகவினர்...ஆனா ஆக்ஷன் இல்ல!! கொதிக்கும் அண்ணாமலை!!

Tamil nadu BJP K. Annamalai
By Karthick Nov 05, 2023 05:26 AM GMT
Report

தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்து வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

அண்ணாமலை அறிக்கை

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , மாண்புமிகு பாரத பிரதமர் மோடி அவர்களை, ஒருமையில் தரக்குறைவாகப் பேசிய காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசனைக் கண்டித்துப் போராட்டம் நடத்திய பாஜக சகோதரர்கள் மீது பொய் வழக்குகளைப் பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

annamalai-comments-on-dmk-and-tn-police

திருமதி. கனிமொழி அவர்கள் பங்கேற்ற கூட்டத்தில், காவல்துறையில் பணிபுரியும் சகோதரிகள் மீது பாலியல் சீண்டல் செய்த திமுகவினரைக் கைது செய்வதில் காட்டாத வேகத்தை, பாஜகவினர் மீது போலி வழக்குகள் பதிவு செய்வதில் காட்டியிருக்கின்றனர்.

பாஜக கூட்டணியில் தேமுதிக...?? அவசர அவசரமாக தேமுதிக வெளியிட்ட அறிக்கை!!

பாஜக கூட்டணியில் தேமுதிக...?? அவசர அவசரமாக தேமுதிக வெளியிட்ட அறிக்கை!!

தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. காவல்துறையில் பணிபுரியும் சகோதரிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் கூட பாதுகாப்பில்லாத நிலை தமிழகம் முழுவதும் நிலவுகிறது. இந்தச் சூழ்நிலையில், பொதுமக்களைக் காக்க வேண்டிய காவல்துறையினர், தங்கள் கடமையை மறந்து, திமுகவின் ஏவல்துறையாக முழுவதுமாக மாறியிருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது. இன்று திமுகவினர் தெரிந்தே செய்யும் தவறுகளுக்கு நிச்சயம் வருந்தும் நிலை ஏற்படும் என்பதை கூறிக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.