எம்.பி ஜோதிமணிக்கு உள்ள தொடர்பு.. பெண் என்பதால் விட்டு வைக்கிறேன் - அண்ணாமலை காட்டம்!

Indian National Congress DMK BJP K. Annamalai
By Vinothini Nov 07, 2023 05:20 AM GMT
Report

 பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுக மற்றும் காங்கிரஸ் குறித்து பேசியுள்ளார்.

சாமி தரிசனம்

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலுக்கு சென்ற பாஜக-வின் மாநில தலைவர் அண்ணாமலை, சாமி தரிசனம் செய்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், "நாகலாந்து மாநிலம் அழகான மாநிலம். அங்குள்ள மக்கள் அற்புதமானவர்கள்.

annamalai-about-jothimani-and-rs-barathi

ஆனால், அவர்கள் நாய்க்கறி சாப்பிடுபவர்கள் என்றும், தமிழகத்தில் உள்ளவர்கள் உப்பு போட்டு சாப்பிடுவர்கள் என்றும் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவமானப்படுத்தியுள்ளார்.

அவரை தமிழக காவல்துறை வழக்குப் பதிவு செய்து கைது செய்திருக்க வேண்டும். ஆனால், அப்படி செய்யவில்லை. அவர் தொடர்ச்சியாக பொறுக்கிப் போன்று, ஆளுநரையும், என்னையும் தரம் தாழ்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்".

அண்ணாமலை பேச்சு

இதனை தொடர்ந்து, அவர், "நான் காங்கிரஸ் கட்சிக்காரனை கேட்கிறேன். ஏதாவது ஒரு ஊரகப் பகுதிகளில் கூட்டத்தை கூட்டி காட்டுங்கள். ஜோதிமணி கரூர் நாடாளுமன்ற தொகுதிக்காக என்ன கொண்டுவந்துள்ளார் என்ற கேள்வி கேட்டால், அதனை விளக்குவது அவருடைய கடமை.

annamalai

அதை விட்டுவிட்டு எப்படி வேண்டுமானலும் பேசகூடாது. டி.கே சிவகுமாருக்கும் ஜோதிமணிக்கும், என்ன தொடர்பு இருக்கிறது என்பது எனக்கு தெரியும். நான் அதை எல்லாம் பேச விரும்பவில்லை.

ஜோதிமணி, டி.கே சிவகுமாரிடமிருந்து எப்படி பணத்தை வாங்கி வந்து இங்கு செலவு செய்தார் என்கிற எல்லா விபரங்களும் எனக்கு தெரியும். ஜோதிமணி ஒரு பெண் என்பதால் நான் விட்டு வைக்கிறேன். தரம் தாழ்ந்து இறங்கிப் பேச விரும்பவில்லை" என்று பேசியுள்ளார்.