காதலனுக்காக ரூ.2,484 கோடி சொத்தை தூக்கி வீசிய காதலி - வைரல் ஸ்டோரி!
இளம்பெண் காதலனைத் திருமணம் செய்ய கோடிக்கணக்கான சொத்தை உதறி தள்ளியுள்ளார்.
காதல் அதானே எல்லாம்..
மலேசியாவைச் சேர்ந்த தம்பதி தொழில் அதிபர் கூ கே பெங் மற்றும் முன்னாள் மிஸ் மலேசியா பாலின் சாய். இவர்களது மகள் ஏஞ்சலின் ஃபிரான்சிஸ்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பயின்ற போது தன்னுடன் படித்த சக மாணவரான ஜெடிடியாவை காதலித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து காதலை வீட்டில் தெரிவித்தபோது கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
வைரல் ஸ்டோரி
எனவே, குடும்பத்தை விட்டு வெளியேறி தனது காதலரை திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார். அதன்படி, ஏஞ்சலினும் ஜெடிடியாவும் 2008-ல் திருமணம் செய்து கொண்ட நிலையில், தனது குடும்பத்தினரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இதற்காக, 300 மில்லியன் டாலர்கள் (சுமார் ரூ. 2,484 கோடி) மதிப்புள்ள தனது பரம்பரை சொத்துக்களை வேண்டாம் என்று மறுத்து விட்டார். இந்நிலையில், ஏஞ்சலின் தனது பெற்றோரின் விவாகரத்தின் போது நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டார்.
அப்போது, தந்தை பணம் சம்பாதிப்பதில் மும்முரமாக இருந்த போது, குடும்பத்தை பார்த்துக் கொண்ட தனது தாய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்கள் மீண்டும் ஒன்றாக வருவார்கள் என நம்புவதாக கூறியுள்ளார்.
தற்போது, ஏஞ்சலினின் கதையும் காதலைப் பற்றிய அவரது நேர்மறையான கருத்தும் கவனம் ஈர்த்துள்ளது.