கார் டிரைவருடன் உல்லாசம்; கண்டித்த போலீஸ் கணவர் - இறுதியில் நேர்ந்த கொடுமை!
தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவரை, மனைவி கொலை செய்துள்ளார்.
தகாத உறவு
ஆந்திரா, விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (35). அங்குள்ள காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஷிவானி (30). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், ஷிவானிக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த கார் டிரைவரான ராமாராவ் என்பவருக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இதுகுறித்து தெரியவந்த கணவர், இருவரையும் கடுமையாக எச்சரித்துள்ளார்.
கணவன் கொலை
ஆனாலும், இதனை கண்டுக்கொள்ளாத இருவரும் உறவை தொடர்ந்து வந்துள்ளனர். மேலும், கணவனை கொலை செய்யவும் திட்டமிட்டுள்ளனர். அதன்படி, பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிய ரமேஷுக்கு, மனைவி மது ஊற்றி கொடுத்துள்ளார்.
அதில் போதை தலைக்கேரிய நிலையில் உறங்கச் சென்றுள்ளார். அதனையடுத்து காத்திருந்த கள்ளக் காதலன், அவரது நண்பர் நீலா ஆகியோருடன் சேர்ந்து மனைவி, கணவனை தலையணையால் அமுக்கி மூச்சு திணற வைத்து கொலை செய்துள்ளார்.
மறுநாள் அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக நாடகமாடியுள்ளார். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் மனைவி உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். அதன் அடிப்படையில் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.