ஆந்திராவில் வெடித்த கலவரம், கொழுந்துவிட்டு எரியும் போலீஸ் வாகனங்கள் - பரபரப்பு!
எதிர்க்கட்சி தலைவர் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பொழுது வன்முறை வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சுற்றுப்பயணம்
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் சந்திரபாபு நாயுடு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இவர் ஆந்திர அரசின் நீர் மேலாண்மை திட்ட பணிகளை பார்வையிடுவதற்காக சென்றுள்ளார். மேலும், அவரை தடுத்து நிறுத்துவோம் என ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர்.
ஆனால் இன்று திட்டமிட்டபடி சந்திரபாபு நாயுடு புங்கனூர் பகுதிக்கு வந்து சேர்ந்தார். குறபலக்கோட்டா பகுதியில் உள்ள சந்திப்பு ஒன்றில் இவரது கான்வாயை நிறுத்தி ஆளும் கட்சியின் பெரும் முயற்சியில் ஈடுபட்டனர்.
கலவரம்
இந்நிலையில், அங்கு இருந்த இரண்டு காட்சியினரும் ஒருவரையொருவர் கற்கள், செருப்பு, சோடா பாட்டில், பீர் பாட்டில் ஆகியவற்றால் தாக்கி கொண்டனர். பின்னர் அங்கிருந்த போலீசார் தடியடி மேற்கொண்டனர், அதில் பலர் காயமடைந்தனர்.
மேலும், இந்த கலவரத்தில் போலீஸ் வாகனத்தை கொளுத்தி விட்டனர், அதில் 2 வாகனங்கள் எறிந்தன. போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி வன்முறையில் ஈடுபட்ட கட்சித் தொண்டர்களை விரட்டியடித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
https://ibctamilnadu.com/article/tn-assembly-tamil-nadu-legislative-assembly-1665973385